search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மன உளைச்சல் காரணமாக சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    சென்னையில் மன உளைச்சல் காரணமாக சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    சென்னை பூந்தமல்லியில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி மையத்தில் அதிகாரிகள் அளித்த தண்டனையால் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜேஷ்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். #CRPF
    சென்னை:

    சென்னை பூந்தமல்லியில் சிஆர்பிஎப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றிய ராஜேஷ் குமார் (40) என்ற வீரர் பணி நேரத்தில் செல்போனில் பேசியதால், அதிகாரிகள் தண்டனை அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனால், மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் குமார் இன்று தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×