search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cristiano Ronaldo"

    • கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

    • கிறிஸ்டினா ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து விலகியுள்ளார்
    • தன்னை சவுதி அரேபியா லீக்கில் விளையாட கேட்டுக் கொண்டதாக ரொனால்டோ தகவல்

    உலகின் தலைசிறந்த, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மாட்ரிட் கிளப் அணிகளுக்கான பல வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைப் படைத்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து விலகி, யுவென்டஸ் கிளப்பிற்கு சென்றார். பின்னர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். ஒரு சீசன் கூட முழுமையாக விளையாடாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகியுள்ளார்.

    டிரான்ஸ்பர் ஃபீஸ் இல்லாமல் வேறு கிளப்பிற்கு செல்ல இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய பல்வேறு கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் உடனான பிரச்சினை குறித்து பேசும்போது ரொனால்டோ, ''சவுதி அரேபியா கிளப் ஒன்று 360 மில்லியன் டாலரில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கான தன்னை அணுகியது. எனினும், தான் அதை மறுத்துவிட்டார்'' என்ற செய்தி வெளியானது.

    இதுகுறித்து சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளையாட்டு மந்திரி இளவரசர் அல் பைசல் ''ரொனால்டாவை அணுகியது குறித்து தனக்கு ஏதும் தெரியாது. இதுதான் எனது நேரடி பதில். நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை தெரிந்தீர்களோ? அதேபோல்தான் நானும் அறிந்து கொண்டேன். அவருடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது எனக்குத் தெரியாது.

    சவுதி அரேபியா கிளப்பில் ரொனால்டா விளையாடுவதை பார்க்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஏன் இல்லை? எங்களிடம் வலுவான லீக் உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ஏழு வெளிநாட்டு வீரர்களை பெற்றுள்ளது. அதை அதிகப்படுத்த பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியாவில் எங்கள் அணி டாப் லெவலில் விளையாடுகிறது. சவுதியில் கால்பந்து வலிமையாக உள்ளது. ஆகவே, ஏன் அவர் விளையாடுவதை விரும்பக் கூடாது? என்றார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சவுதி அரேபியா அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
    • மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.

    பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

    தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

    அதுதொடர்பாக பேட்டியளித்த "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.

    இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

    • கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
    • காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார்.

    இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின், மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன

    வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo #TaxFraud #Football
    மாட்ரிட்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார். #CristianoRonaldo #TaxFraud  #Football
    பலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். #BallorDor #Ronaldo
    கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன் டி'ஆர் விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்னும் வழங்கப்படவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர்தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இந்த முறை முகமது சாலா, கிரிஸ்மான், வரானே, கலியான் மப்போ ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடம் மெஸ்சி விருதை வாங்குவாரா? என்பது தெரியவில்லை. ஆகவே, சாலா, மோட்ரிச், கி்ரிஸ்மான், வரானே அல்லது மப்பே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது’’ என்றார்.
    ‘செரி ஏ’ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என எம்போலியை வீழ்த்தியது. #Juventus #Ronaldo
    இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் தொடரான ‘செரி ஏ’-யில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் எம்போலி - யுவான்டஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் எம்போலி அணியின் கேபுட்டோ கோல் அடித்தார். இதனால் 1-0 என எம்போலி முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 54-வது நிமிடத்தில் யுவான்டஸ்க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக கோல் அடித்தார்.



    அதன்பின் 70-வது நிமிடத்தில் அபாரமான வகையில் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 20 நிமிடங்களால் எம்போலி அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. இரண் கோல் அடித்து ரொனால்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    ரொனால்டோவுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் படையெடுத்தனர். ஆனால் ஒருவருக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. #Ronaldo
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைனெட் அணியும், இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாற்றுவது எளிதல்ல என யுவான்டஸ் கிளப்பின் டைரக்டர் பேபியோ பராட்டிசி தெரிவித்துள்ளார். #Ronaldo
    ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ (33) கடந்த சீசனுக்குப் பிறகு யுவான்டஸ் அணியில் இணைந்தார். யுவான்டஸ் அணி ரொனால்டோவை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றது. அதேசமயத்தில் ரியல் மாட்ரிட் அணி, ரொனால்டோ வெளியேறியதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றது.

    இந்த சீசனில் யுவான்டஸ் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவான்டஸ் கிளப் இயக்குனர் பராட்டிசி ரொனால்டோ குறித்து கூறுகையில் ‘‘எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத்தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.



    இதற்கிடையே யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக்கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வரவாய்ப்பில்லை என்றார். ரொனால்டோவை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல’’ என்றார்.

    லா லிகா சீசனில் ரியல் மாட்ரிட் கடைசி மூன்று போட்டியில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
    பலோன் டி’ஆர் விருதிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது #Ronaldo #messi
    கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மதிப்பிற்குரிய பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விருதிற்கான முதற்கட்ட வீரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் ரொனால்டோ உள்பட 10 பேர் கொண்ட முதற்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    பிரான்ஸ் கால்பந்து மெகசின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதை ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை வென்றுள்ளனர்.

    ரொனால்டோ (யுவான்டஸ்)
    செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி)
    அலிசன் பெக்கெர் (லிவர்பூல்)
    காரேத் பேலே (ரியல் மாட்ரிட்)
    கரிம் பென்சிமா (ரியல் மாட்ரிட்)
    எடின்சன் கவானி (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்)
    டிபாயட் கோர்ட்டாய்ஸ் (ரியல் மாட்ரிட்)
    கெவின் டி ப்ரூயின் (மான்செஸ்டர் சிட்டி)
    ரொபேர்ட்டோ ஃபேர்மினோ (லிவர்பூல்)
    டியேகோ காடின் (அட்லெடியோ மாட்ரிட்)
    பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
    கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).



    நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
    ரொனால்டோ பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கியதால், யுவாடன்ஸின் பங்கு 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நைக் கவலையடைந்துள்ளது. #Ronaldo #Juventus
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த வீரரான இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். சுமார் 9 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார்.

    இவரது தலைமையில் ரியல் மாட்ரிட் வெற்றிமேல் வெற்றிகளை குவித்தது. இந்நிலையில் இந்த சீசனில் இருந்து இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ்க்கு மாறினார். ரொனால்டோ யுவான்டஸ் வந்ததும் யுவான்டஸ் அணியின் மதிப்பு அதிகரித்தது.



    இந்நிலையில்தான் ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த மயோர்கா கேத்ரின் ரொனால்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக பணம் ஒப்பந்தம் முறையில் கொடுக்கப்பட்டது என்றார்.

    இதனால் ரொனால்டோ வழக்கை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார். ரொனால்டோ யுவான்டஸ் அணியில் சேரும்போது அந்த அணியின் பங்கு அதிக அளவில் உயர்ந்தது. தற்போது ரொனால்டோ பிரச்சனையில் சிக்கியதால் யுவான்டஸ் அணியின் பங்கு 5 சதவீதம் சரிந்தது. அதேபோல் பலகோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனமும் கவலையடைந்துள்ளது.
    ×