search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crime"

    • கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளதாக அமைச்சர் கூறினார்

    தூத்துக்குடி:

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

    குழந்தைநேய தூத்துக்குடி

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து, குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைநேய தூத்துக்குடி மாவட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதனை கலெக்டர் செந்தில்ராஜ் பெற்று கொண்டார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமப்பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சட்டத்திற்கு புறம்பான செயலில் குழந்தைகள் ஈடுபடுவது தமிழகத்தில் 2-வது மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இது வேதனை அளிக்கிறது.

    குற்றச்செயல்

    குற்றச்செயல்களில் சிறார்களை ஈடுபடுத்துவதில் 2-வது இடத்தில் இருப்பதால் முதல்-அமைச்சர் குழந்தைகள் சம்பந்தமான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி இருக்கிறார்.

    ஆனால் முறையான சட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற முறையில் தான் செயல்பட்டு வருகிறோம்.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் நாளை சிறப்பு நிகழ்வாக யூனிசெப் நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஒரு வருடத்தில் சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்துவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் பூரணி, சரண்யாசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வெட்டிக்காடு பகுதிகளில் கடந்த 4 மாதமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பறித்து சென்று வந்துள்ளார்.
    • கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளான கரம்பயம். செம்பாளுர், எட்டுப்புலிக்காடு, ஆலத்தூர், ஆலடிக்குமுளை, வீரக்குறிச்சி, பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து பறித்து சென்று வந்துள்ளார்.

    மேலும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும், பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும், நடந்து வந்தது. இதனால் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் ஏற்பட்டு இருந்து வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் யார் ஈடுபடுகிறார்கள் என தெரியாமல் போலீசாரும் குழம்பி வந்தனர். போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் நபரை எப்படி கண்டறிவது என போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அடையாளம் தெரியாத நபரை உடனடியாக பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் சுபாஷ்ச–ந்திரபோஸ், பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோரின் மேற்பார்வை–யில்ப ட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் மற்றும் போலீசார் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து, சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளி கண்டுபிடித்தனர். இதில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர் 70 வயது நிறைந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி கேமராவில் புகைப்படத்தை எடுத்து அவனை தேடிவந்தனர்.

    மேலும் விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி என்பதும், பெரியசாமி என்பவரின் மகன் பழனி என்கிற பழனியாண்டி (வயது 70) என்பதும் தெரியவந்தது.

    மேற்படி நபர் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்ட தனிப்படையினர் மேற்படி நபர் இருக்கும் இடம் குறித்து கடந்த 2 மாதமாக தேடிவந்த நிலையில் மேற்படி குற்றவாளி ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்களத்தில் 35 வருடங்களாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குலமங்களம் கிராமத்தில் குற்றவாளியை பிடிக்க மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் தேடிச் சென்றபோது அங்கிருந்து பழனியாண்டி தப்பி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் நேற்று ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பழனியாண்டி நிற்பதை அறிந்த தனிப்படை போலீசார் அவனை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

    35 வருடங்க–ளுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும், இவர் மீது திருச்சிற்றம்பலம், திருவோணம் காவல் நிலையத்திலும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தண்டனை பெற்றிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் நகைகளை கொள்ளையடித்து ஒரத்தநாடு தாலுக்கா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின் பேரில் நகைகள் கைப்பற்றப்பட்டது.

    மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாக திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் 4 வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்றது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த. பட்டுக்கோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யிலான தனிப்படையினரை உயரதிகாரிகள் பலர் பாராட்டினர். 

    தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வீடு, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    போரூர்:

    வளசரவாக்கம், ராமாபுரம் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய வளசரவாக்கம் சரகத்தில் புதிதாக 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

    கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன், உதவி கமி‌ஷனர்கள் சம்பத், ஆரோக்யபிரகாசம், வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அமுதா, கவுதமன், சந்துரு, ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், வேலுமணி, பிரான்சிஸ் ரூபன், பாலமுரளி, கோகிலா, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது :-

    50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.

    இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.

    நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் விசுவநாதன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் குற்றங்களை தடுக்க முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரை 998 கண்காணிப்பு காமிராக்கள் திருவொற்றியூர் சாலை, எண்ணூர் விரைவுச்சாலை உள்ளிட்ட 11 முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் இந்த கண் காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் மூன்றாவது கண் என்ற பெயரில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதை ஒரு இயக்கமாக செய்து வருகிறோம்.

    இதற்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.

    குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு காமிராவில் கண்காணிக்கப்படுகிறோம். என்ற பயத்துடன் உள்ளனர்.

    கடந்த மாதங்களில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு காமிரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரி செய்ய உரிய கவனம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    2016-ம் ஆண்டு மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான வழக்கில் அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். #SikhMan
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் நகரின் டுபோண்ட் சர்க்கிள் பகுதியில் 2016-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21-ந் தேதி, மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.

    அவர் அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப்படை வீரரான திலான் மில்ஹாசன் என்பவர், அவரது தலைப்பாகையை பிடித்து இழுத்ததுடன், அவரது முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். இதில் அவர் மயங்கிச் சரிந்தார். இது இனவெறித்தாக்குதல் ஆகும்.

    இது தொடர்பாக மெக்தாப் சிங் பக்‌ஷி புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, திலான் மில்ஹாசனை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம், நவம்பர் 30-ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    இதேபோன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விலாசினி கணேஷ் என்ற பெண் சுகாதார திட்ட மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அங்கு உள்ள கோர்ட்டு 63 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.  #SikhMan
    ×