search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consultation"

    • நுகர்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி. விலைப்பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஜி.எஸ்.டி.வரி முறையில் தற்போது புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள், மாற்றங்கள் போன்றவற்றில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில வரி ஆலோசகர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி முறையில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும், கடந்த 6 மாதங்களாக நமது உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி. விலைப்பட்டியலில் ஏற்படும் சிறிய தவறுகளுக்கு கூட பெரிய அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்தை தவிர்ப்பதற்கு உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும், சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தை குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.
    • குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி களிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்க ளுக்கு குடிநீர் வழங்கும் பணி தான் அரசின் முதன்மையான பணியாகும். ஆகவே அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும். அதற்கு தேவை யான நிதி பெற்று தரப்படும்.மேலும் விருதுநகர் மாவட் டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி யில் 1 முதல் 21 வார்டு பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் 22 முதல் 42 வார்டு பகுதி களில் 10 முதல் 15 நாட்க ளுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை சரி செய்து 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் கேட்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய இதுபோல் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர், கண்டிப்பாக கிராம பகுதிகளிலும் முறை யாக குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சேர்மன்கள், கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
    • மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-

    இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

    நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • கலெக்டர் பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்த கைய சிறப்புவாய்ந்த சனீ ஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி, 2 1/3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் நேற்று பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவி லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்த ர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி கள், கோவில் மேஜேனர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஊழி யர்கள் உடன் இரு ந்தனர்.

    • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 31-ந் தேதி தொடங்குகிறது.
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 31-ந் தேதி தொடங்குகிறது.

    உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023 - 2024-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வருகின்ற 31-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாள் 31-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், ஏ, சான்றிதழ் பெற்ற தேசிய மாணவர் படை உறுப்பினர், அந்தமான் நிகோபர் பகுதி தமிழ் வம்சாவழியினர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்புப்படை வீரர்களின் குழந்தைகள் மற்றும் துணைவியார், மாவட்ட, மாநில, தேசிய, அகில உலக அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான பி.பி.ஏ. (60), பிகாம் (சுழற்சி I - 60), பிகாம் (சுழற்சி II - 60), பிகாம் சிஏ (சுழற்சி I - 60), பிகாம் சிஏ (சுழற்சி II -60), இ-காமர்ஸ் (60), பொருளியல் (50), அரசியல் அறிவியல் (50) கலந்தாய்வு நடைபெறும்.

    5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான இயற்பியல் (48), வேதியியல் (48), தாவரவியல் (20), கணிதவியல் (48), கணினி அறிவியல் (சுழற்சி I - 50), கணினி அறிவியல் (சுழற்சி II - 30), புள்ளியியல் (40) கலந்தாய்வு நடைபெறும்.6-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்த மாணவர்களுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது.

    மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் மூன்று நகல்கள், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மூன்று நகல்கள், அசல் மாற்–றுச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சாதிச்சான்றிதழ் தலா மூன்று நகல்கள், பாஸ்போர்ட் அளவு 6 புகைப்படம், www.tngasa.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல், கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் ஒருபக்க தரவரிசை விவரத்தின் நகல் கொண்டு வரவேண்டும். மேலும் உரிய கல்விக்கட்டணம், சிறப்புப்பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்கள் அதற்கான உரிய அசல் சான்றிதழ்கள் மூன்று நகல்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தர வேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியை பார்வையிடலாம்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகின்ற 30-ந்ேததி ெதாடங்குகிறது
    • சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் https://dkgacklt.in/ என்ற கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கல்லூரியில் நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பானை, மாணவர்கள் விண்ணப்பித்த பொழுது வழங்கிய அலைபேசி எண்ணின் வாட்ஸ்-அப், இணைய முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும்.

    வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஜூன் 3-ந் தேதி காலை10 மணிக்கு வணிகவியல் (பி.காம்), வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.), வணிகவியல் கணினி பயன்பாட்டியல் (பி.காம் சி.ஏ) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    ஜூன் 6-ந் தேதி காலை 10 மணிக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூன் 7-ந் தேதி காலை 10 மணிக்கு மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குசேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் உரிய நாட்களில் காலை 10 மணிக்கு இைணய வழி விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் தங்களுடைய 2 புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 படிவம் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு வருகை தரவேண்டும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் https://dkgacklt.in/ என்ற கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரி யலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 29-ந் தேதி திங்க ட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணி அளவில் விளையா ட்டு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மற்றும் 30-ந் தேதி நடைபெறும் ராணுவம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ஜூன் 1-ந் தேதி புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவில் இணை யதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடை பெறும்.

    பின்னர் 2-ந் தேதி வணிகவியல் மற்றும் பொருளி யல் பிரிவு மாணவ ர்களுக்கான கலந்தாய்வும், ஜூலை 5-ந் தேதி பி.ஏ., தமிழ் இலக்கணம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், புகைப்படம், வருமானச் சான்றிதழ் ஆகிய வற்றுடன் தனது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும். மேலும் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியலை பார்வையிட்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது.
    • திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகமே நிதி நெருக்கடியில் திணறிய போதும் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது. உள்நாட்டு வர்த்தகமும் பிசியாகியுள்ளது. இருப்பினும் ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சோர்வடைந்துள்ளன.

    ஏற்றுமதி ஆடை உற்பத்தி பாதிப்பால் நூற்பாலைகளும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலையால் ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ள பாதிப்புகள், அதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், திருப்பூரின் தொழில் நிலவரம் குறித்து மத்திய, மாநில அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் நிலவும் பிரச்சினையை தெரிவித்து, தகுந்த உதவிகளை கேட்டுப்பெற வேண்டும். அதற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

    • பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.

    • மண்டபம் மேற்கு ஒன்றிய‌ அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடந்தது
    • நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க. மண்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் மகளிர் அணி இளைஞர், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வக்கீல் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் வரவேற்றார்.மாற்று கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கட்சி வேட்டிகளை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி ஆய்வு,புதிய உறுப்பி னர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது.பெண்களை அதிகளவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் அனைவரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப் டுவார்கள்.

    தி.மு.க. பொய் வாக்கு றுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது. 2 ஆண்டுகளில் மக்களை பற்றி கவலை இல்லாமல் ஆட்சி நடை பெறுகிறது. இப்போது தி.மு.க. ஆட்சியில் கள்ளச் சாராயம், போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி நீடித்தால் வருங்கால சந்ததியினர் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படும்.

    தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டால் அ.தி.மு.க. 190 சட்டமன்ற தொகுதிகளையும், 40 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், முருகேசன், கார்மேகம், முகேஷ், மருது பாண்டியர் நகர் கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சக்தி நாகஜோதி, கோபி, ஆசிக் உள்பட மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது
    • 20 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆைண வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய தள வாயிலாக நேற்று நடைபெற்றது.இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 35 தலைமையாசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 தலைமையாசிரியர்கள் விரும்பிய பள்ளிகளை இணைய தள வாயிலாக தேர்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் 20 தலைமையாசிரியர்களுக்கு அதற்கான ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில்  முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) ராஜூ, கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை.செந்தில், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் சீனிவாசன்,  பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பிரிவு உதவியாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.பொது மாறுதல் கலந்தாய்வின் வாயிலாக விரும்பிய பள்ளிகளை இணைய தள மூலம் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும், தமிழக கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • நில உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்புச் சாலை திட்டப்பணியில் நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த பணியில் நில உரிமையாளர்களுடன் இறுதி கலந்தாய்வு கூட்டம் ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நில உரிமையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கை ஒப்படைத்தனர்.

    அவர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் ஜூன் மாத இறுதியில் பணம் வரவு வைக்கப்படும், மேலும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக அடுத்த மாதம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு சாலை அமைக்கும் விரைவில் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நில உரிமை யாளர்கள் அனைவருக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரான தனது சார்பாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இந்த கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×