search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Secretary"

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்துடன் மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து அகில இந்திய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சிகளை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சண்முகம் தலைமையில், பொருளாளர் நடராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேசியதாவது:-

    மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் பஸ் நடத்துனர் லைசென்சு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் நடத்துனர் இல்லாத பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவில் போக்குவரத்து தொழிலை நசுக்கும் பல்வேறு அபாயங்கள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

    மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
    புதுடெல்லி:

    டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார்.  #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews 
    டெல்லியில், முதல்வர் அரவிந்த் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமைச்செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதுடன், தாக்கினர் என புகார் எழுந்தது.

    இது தொடர்பாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமனத்துல்லா உள்ளிட்டவர்கள் மீது அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து டெல்லி (வடக்கு) கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர சிங் தலைமையில் 6 பேரை கொண்டு குழுவினர், கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தன்னிடம் நடத்துகிற விசாரணையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கும் ஒரு சி.டி. தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாரும் கடந்த மாதம் டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.  #DelhiCM #Kejriwal
    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி உத்தரவைப் பெறவேண்டும்.

    வெளிமாநிலங்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், தலைமைச் செயலாளர் மூலமாக முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

    அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், துறை செயலாளர்கள் அல்லது தலைமைச் செயலாளர் அல்லது முதல்-அமைச்சர் மூலம் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

    அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை செயலாளரின் உத்தரவைப் பெறவேண்டும். #IAS ChiefSecretary #GirijaVaidyanathan
    ×