search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவனின் முடியை வெட்டி மானபங்கம் - ஒடிசா அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் 1 லட்சம் அபராதம்
    X

    மாணவனின் முடியை வெட்டி மானபங்கம் - ஒடிசா அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் 1 லட்சம் அபராதம்

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    Next Story
    ×