search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Home Secretary"

    • காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    • மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    புதுச்சேரி:

    காட்டுநாயக்கன், மலைக்குறவன் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இணை செயலாளர் (யூனியன் பிரதேசம்) அசுடோஷ் அக்னிஹோத்ரி ஆகியோர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில், புதுவை மாநிலத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், எருகுலா ஆகிய இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அதிகாரிகள், இது ெதாடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இந்த சந்திப்பின் போது எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன், கொள்ளப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

    பசு காவலர்கள் மற்றும் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி சட்டத்தை கையில் எடுத்து கும்பலாக தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. #MobLynching
    புதுடெல்லி:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

    சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



    இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும்.

    ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
    புதுடெல்லி:

    டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார்.  #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews 
    ×