என் மலர்
நீங்கள் தேடியது "mob lynching"
- உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என வாலிபர் கோசம்.
- அங்கிருந்த கும்பல் ஒன்று அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடுப்பு கிராமத்தில் பாத்ரா கல்லூர்த்தி கோவில் அருகே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் உள்ளூரைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடிள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்திருந்தனர். அப்போது அஷ்ரப் என்பவர், பாகிஸ்தான ஜிந்தாபாத் என கோஷமிட்டுள்ளார்.
தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோசம் எழுப்பிய அஷ்ரஃப்-ஐ அங்கு கூடியிருந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அஷ்ரஃப் படுகாயம் அடைந்து, மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஷ்ரஃப் கேரளாவின் வயநாடு மாவட்டம் சுல்தான் பதேரி தாலுகா புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு சித்தராமையா அளித்த பதில் பின்வருமாறு:-
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பப்பட்டிருந்தால், அது யாராக இருந்தாலும் தவறு. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை வரட்டும். யாருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிவிடும். பாகிஸ்தானுக்கு எதிராக யார் பேசியிருந்தாலும் அது தவறு. அது தேச துரோகத்திற்கு சமம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
கேரள மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக மாநில போலீஸ் துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-
மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரகிறது. தற்போது சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் இந்த சம்பவத்தை மிகவம் தீவிரமானதாக எடுத்துள்ளோம். கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு ஏராளமானோர் சென்றுள்ளனர். தகவல் சேகரிக்க அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணை தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, அறியாமையால் சில மக்கள் நடத்தும் கும்பல் தாக்குதல்களினால் உயிரிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாடு கடத்தியதாக சிலர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தாக்கப்பட்டவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறியாமையினால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களினால் தொடர்ந்து உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. #UttarPradesh #MobLynching
இந்தியாவில் சமீபத்தில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற பல்வேறு வதந்திகளால் ஏற்படும் விளைவுகள் உயிர்பலி வாங்குவதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலம் பிஸ்வந்த் கிராமத்தில் பசு கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சங்கட் டண்டி என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை 4 பேர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், அதனை பார்த்த சங்கட், கூச்சலிட்டபோது ஊர்மக்கள் அந்த கும்பலை வழிமறைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான திபென் ராஜ்போங்ஸ்கி என்பவர் உயிரிழந்தார். மேலும், புஜன் காடோவர், புல்சந்த் சாஹு, பிஜோய் நாயக், ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுக்களை கடத்தியதாக 4 பேர் மீதும், கும்பல் தாக்குதலுக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றங்கள் எத்தகையதாக இருந்தாலும், அதற்கு மக்கள் தண்டனை கொடுப்பதும், சட்டத்தை கையில் எடுப்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தவிர்க்கப்படும்போதே இதுபோன்ற சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MobLynching #Assam







