search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai high court"

    • 2016-ம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்தது.
    • 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

    இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பின்னர் நேற்று முன்தினம் பொன்முடி குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு 21-ந்தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    தண்டனை அறிவிக்கப்பட இருப்பதால் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • ஏரிகளை பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன், ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாத புள்ளி விவர கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டுள்ளது.

    கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
    • ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர்.

    சென்னை:

    பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி மற்றும் சாந்தி. இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.

    இந்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சீனிவாச ராவ் ஆஜராகி பட்டா கேட்டு மனுதாரர்கள் மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் பரிசீலிக்க வில்லை. எந்த பதிலும் சொல்வதில்லை. அதனால் இந்த வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு மனுதாரர் தள்ளப்பட்டு உள்ளார் என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


     மனுதாரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடுத்த மனுவை அதிகாரிகள் சட்டப்படி பரிசீளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை 2 மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் செய்து முடிக்க வேண்டும். பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் பட்டா கேட்டும், பட்டா மாற்றத்திற்கும், நிலத்தை அளப்பதற்கும், மறு அளவீடு செய்வதற்கும், எல்லையை வரையறை செய்வதற்கும் பொதுமக்கள் ஐகோர்ட்டை நாட வேண்டியதுள்ளது. அதாவது, சிறு சிறு கோரிக்கைகளுக்காக பொது மக்கள், ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சிறு உத்தரவை பெற வழக்கு தொடர வேண்டியதுள்ளது.

    அரசு அதிகாரிகள் படைபலம், பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்களே தவிர சாதாரண குடிமக்களுக்கு வேலை செய்வது இல்லை என்று இந்த வழக்கு மூலம் தெளிவாகிறது.

    சில நேரங்களில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அரசு பிறப்பிக்கும் சுற்றறிக்கையை, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்கிறார்களா, பின்பற்றுகிறார்களா? என்பது கூட தெரியவில்லை. அதிகாரிகள் பணி செய்யாமல் இருப்பதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே இந்த உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும். அந்த உத்தரவை தலைமைச் செயலாளரும் பிற துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் இது போன்ற கோரிக்கை மனுக்களை காரணம் இல்லாமல் பரிசீலிக்காமல், நிலுவையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பாவார்கள். வழக்கை முடித்து வைக்கிறேன்

    இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்

    • சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
    • வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையை சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

    இந்த கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன். 9 மாதங்களுக்கு தலா மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

    எனவே எனக்கு ஊதியம் மற்றும் இழப்பீட்டு தொகையுடன் ரூ.4.48 லட்சம் தர வேண்டி உள்ளது. அதனை வழங்க கப்பல் நிறுவத்திற்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து பலமுறை கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அதனை சிறை பிடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்துசாமி ஆஜராகி தற்போது எம்.வி. ரகிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை சென்னை தனியார் கப்பல் நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனை சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர்.
    • வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் வந்தது.

    அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

    இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் நிதியோகிக்கபட மாட்டாது என்றது.

    மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.
    • இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. பல வருடங்களாக சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இப்படம் இன்று ரிலீஸாக இருந்தது.

    ஆனால், கவுதம் மேனனுக்கு எதிரான வழக்கில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்காவிட்டால் படம் வெளியாக அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.

    இதனால், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குனர் கவுதன் மேனன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த விளக்கத்தில், " பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை.

    ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணம் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும்.

    பணத்தை செலுத்திய பிறகே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்.
    • நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், துருவ நட்சத்திரம் திரைப்படம் நிபந்தனையுடன் நாளை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, "ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது.

    நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
    • இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வக்கீல்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட இருவரும் 2 ஆண்டுகள் பணியாற்றுவார்கள்.

    இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    • மலேரியா, டெங்கு போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
    • சனாதனம் பல கடமைகளை குடிமகன்களுக்கு வலியுறுத்துகிறது என்றார் நீதிபதி

    கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று சென்னையில் "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த "சனாதன எதிர்ப்பு" கூட்டத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அதில் அவர், "சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; மலேரியா, டெங்கு போல் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என பேசினார்.

    உதயநிதியின் கருத்திற்கு தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஆனால், தமிழக எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. தற்போது வரை இந்த சர்ச்சை ஓயவில்லை.

    இது சம்பந்தமாக உதயநிதிக்கு எதிராக முதலில் உத்தர பிரதேசத்திலும், பிறகு மகராஷ்டிரத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் கிடாரம்கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் சார்பாக மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான நேற்று சனாதனத்திற்கு எதிராக மாணவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த சுற்றறிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உத்தரவிடுமாறு இதனை எதிர்த்து தமிழகத்தின் இந்து முன்னணியை சேர்ந்த டி. இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இவர் சார்பில் ஜி. கார்த்திகேயன் எனும் மூத்த வழக்கறிஞர் வாதாடினார். இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என். சேஷசாயி கருத்து தெரிவிக்கும் போது:

    "கருத்து சுதந்திரம் முழுமையான கட்டுப்பாடற்ற சுதந்திரமல்ல. அரசியலமைப்பு சட்டத்தின் 19-(2) பிரிவின்படி சில நியாயமான கட்டுப்பாடுகளும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. பொது அரங்கில் கருத்து சுதந்திரத்தை மத உணர்வு சம்பந்தமான விஷயங்களில் பயன்படுத்தும் போது எவர் மனமும் புண்படாமல் பேச வேண்டும்."

    "சமூகத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் விதமாக கருத்து சுதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் வெறுப்பு பேச்சுக்கான அனுமதி அல்ல. மேலும், ஒரு குடிமகன் நாட்டிற்கும், நாட்டை ஆள்பவருக்கும், தனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமையை சனாதனம் வலியுறுத்துகிறது. சனாதனத்தை அழிக்க வேண்டும் என கூறுபவர்கள் அத்தகைய கடமைகளையும் அழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்களா? ஒவ்வொரு மதத்திற்கும் சில நம்பிக்கைகள் உள்ளன," என்று தெரிவித்தார்.

    • 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் ஓ.பி.எஸ். வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்
    • 1.76 கோடி ரூபாய் அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலிதாவின் 2001-2006 ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருந்தார்.

    2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2011-ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது, அப்போது, வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. 2012-ல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத அடிப்படையில் வழக்கு திரும்பப்பெற முடிவு செய்து மனுதாக்கதல் செய்யப்பட்டது.

    இதனால் சிவகங்கை நீதிமன்றம் ஓ. பன்னீர் செல்வம் உள்பட்ட வழக்கில் இணைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் என அறிவித்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இது தொடர்பாக பதில் அளிக்க ஓ. பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன" என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறிநிலைத்துறை அதிகாரிகள், கனிமொழி எம்.பி., பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு
    • பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் 11 வழக்குகள் பதிவு

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹெச். ராஜா. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பெரியார் சிலையை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கனிமொழி எம்.பி. குறித்து பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது 11 வழக்குகள் உள்ளன.

    இந்த 11 வழக்குகளையும் ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அறநிலைத்துறை அதிகாரிகள் தொடர்பான புகாரில் வாய்வழி செய்தியை கேட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனிமொழி வழக்கில் அரசியல் விமர்சனமாக பேசப்பட்டது. மேலும், இது தொடர்பான பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக புகார் அளிக்கவில்லை. எனவே வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஹெச். ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார்.

    அதற்கு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹெச்.ராஜாவின் விமர்சனம் தனிப்பட்ட மனிதர் குறித்த விமர்சனம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் சார்ந்த விமர்சனம். பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். நீதிமன்றம் தானாகவே முன்வந்து, விசாரணை நடத்த முடியும் என வாதங்களை முன்வைத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளையும் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து கீழமை நீதிமன்றம் 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க அரசு முடிவு.
    • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கலைஞர் முயற்சி செய்தார்.

    தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு தயாராகும் வகையில், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாக தமிழ் சட்ட சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றிய சட்டங்கள், அவசர சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை முன்னாள் முதல்வர் கலைஞர் எடுத்து வந்தார். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் இந்த தருணத்தில் தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ×