search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camera"

    பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐ.ஜி. முருகன் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

    இந்த புகாரை விசாரித்த கமிட்டி, ஐ.ஜி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து புகாருக்கு ஆளான ஐ.ஜி. முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் மீது 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, வாதாடினார்.

    அப்போது அவர் ‘ஐ.ஜி.க்கு எதிராக போலீசில் புகார் செய்யாமல், தான் பணியாற்றிய துறையின் இயக்குனரிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு புகார் கொடுத்ததால், நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆனது’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘பாலியல் கொடுமை தொடர்பாக பெண்கள் புகார் கொடுக்கும் போது, அதில் உள்ள நடைமுறை குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல், உடனடியாக நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று கூறினார்.



    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு அது போன்று நாம் செயல்படுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார். எனவே அதன்படி நடக்க வேண்டும் என்பதால் என்னுடைய சேம்பர் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவு துறைக்கு உத்தரவிடுகிறேன்.

    இந்த வழக்கை பொருத்த வரையில் பெண் போலீஸ் அதிகாரி, ஐ.ஜி.மீது கொடுத்துள்ள பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த கூடுதல் டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கிறேன்.

    இந்த கமிட்டியில் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணம்மாள், கனகா, டி.எஸ்.பி. ராமதாஸ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வல்ச ராகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 வாரத்துக்குள் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டால் இந்த கமிட்டி ஐகோர்ட்டை நாடலாம்.

    பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டப்படி வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஐ.ஜி. முருகன் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளதால் பணி விதிகளின்படி தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண் அதிகாரிகள், ஊழியர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலகங்களின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஐ.ஜி.முருகன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #MadrasHC
    எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch



    ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.



    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.

    புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.

    அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது. 


    ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.

    எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

    அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


    பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    செம்பியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 222 இடங்களில், 359 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கான கட்டுப்பாட்டு அறை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வட சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் இன்று தொடங்கிவைத்தார். இதில் துணை கமி‌ஷனர் சாய்சரண் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 3-வது கண் என்று அழைக்கப்படும் கேமராக்கள் எந்தெந்த வகையில் பாதுகாப்பாக உள்ளன என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

    பழனி வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க 100 காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் பழனி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி அருகே பாப்பம்பட்டி, காவலப்பட்டி, குதிரையாறு அணைப்பகுதி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் ஆனைமலை வனச்சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 6 பீட் பகுதிகளில் வனவிலங்குகளை கண்காணிக்க காமிராக்களை பொருத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது ஆனைமலை வனச்சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 6 பீட் பகுதிகளில் தற்போது 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த காமிராக்கள் ஒவ்வொன்றும் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 7½ மீட்டர் தூரத்தில் நடமாடும் விலங்குகளை புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை.

    முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகள் முதல் யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளின் நடமாட்டத்தை இந்த காமிராக்கள் மூலம் துல்லியமாக கண்டறியலாம்.

    வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் போது மட்டும் இந்த கேமராக்கள் செயல்படும். மற்ற நேரங்களில் காமிராவின் இயக்கத்தை தானாக நிறுத்தும் வகையில் ஒரு கருவியும் காமிராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த காமிரா மூலம் எடுக்கும் படங்கள் அதில் உள்ள தற்காலி நினைவகத்தில் சேமிக்கப்படும். அதன் மூலம் எங்களால் எந்தெந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடைகளில் திருட்டு நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 மதுக்கடைகளில் எச்சரிக்கை ஒலி சாதனத்தை நிறுவி உள்ளோம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 1250 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டில் 10,08,625 பீர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.161.69 லட்சம் ஏற்றுமதி கட்டணமாக பெறப்பட்டுள்ளது.

    மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.26,995 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைத்து இருந்தது. 2017-18ம் ஆண்டில் ரூ.26,794 கோடியே 11 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    இதில் ஆயத்தீர்வை வருவாய் 2016-17ல் ரூ.6,248 கோடியே 17 லட்சம் வந்தது. 2017-18ல் 6,009 கோடியே 25 லட்சம்தான் கிடைத்துள்ளது. ஆயத்தீர்வை வருவாய் குறைவாகவும், மதிப்பு கூட்டு வரி அதிகமாகவும் இருப்பது, வரி விதிப்பு முறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் ஆகும்.

    இந்த தொகை அரசிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தால் 2012-13ம் ஆண்டில் மிகையாக செலுத்தப்பட்ட சிறப்புரிமை கட்டணம், விற்பனை கட்டணம் ரூ.193 கோடியே 96 லட்சத்தை கழிப்பதற்கு முன்னதாக உள்ள தொகையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பழுதான 1,66,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து 1,000 டிரான்ஸ்பார்மர் கைமாற்றாக வாங்கி இருக்கிறோம். இப்போது டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு கொடுத்து வருகிறோம்.

    தட்கல் முறையில் வருடத்துக்கு 10,000 மின் இணைப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பதிவு செய்தவர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆண்டுக்கு 10,000 மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மின் ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கம்பங்களில் ஏறுவதாக உறுப்பினர் தெரிவித்தார். மின்வாரியம் பாதுகாப்பு கவசங்களை ஊழியர்களுக்கு கொடுத்து உள்ளது. அவர்கள் அதை கொண்டு வராமல் இருந்து இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    ×