search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர்"

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
    • சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர். 

    • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
    • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

    தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

     


    "எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

    "இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

    "இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை.
    • தனியார் மையங்களுக்குச்சென்று ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

    உடுமலை:

    தமிழக கல்வித்துறையில் இருந்து பள்ளிகளுக்கு தகவல் அனுப்பப்படுவதில் இப்போது இணையதளம் மட்டுமே மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பள்ளியில் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்படுவது, மாணவர்களின் விவரங்களை கேட்பது, அரசின் அறிவிப்புகள் என அனைத்துமே ஆன்லைன் வாயிலாக, அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்படுகிறது.

    ஆனால், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளில், இன்டர்நெட் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வசதியும் இல்லை. இதனால் மொபைல் போன்களில் தான் இப்போதைய தகவல் பரிமாற்றம் நடக்கிறது. ஆனால் மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்புவதற்கு, இவ்வசதி கட்டாயம் தேவையாக உள்ளது. குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில், இந்த வசதியில்லாததால் தனியார் மையங்களுக்குச்சென்று தான் ஆசிரியர்கள் விவரங்களை கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர்.

    இதனால், வகுப்புகளும் பாதிக்கப்படுகிறது. நடுநிலைப்ப ள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அத்திட்டம் அனைத்து பள்ளி களையும் சென்றடையவில்லை. மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள், ஆன்லைன் வாயிலாக வீடியோக்கள் காண்பிப்பதற்கும், அவர்களின் கல்வி தொடர்பாக செயல்படுவதற்கும், இன்டர்நெட் வசதி தேவையாக உள்ளது. தற்போது வரை ஆசிரியர்களின் மொபைல் போன்களுக்கென போடப்படும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் பல நேரங்களில், சர்வர் பிரச்சினையால் இணைய வசதி செயல்படுவது இல்லை. எனவே பள்ளிகளில் தடையில்லா இன்டர்நெட் சேவை பெறுவதற்கும், கம்ப்யூட்டர் வசதி வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினரும், கல்வி ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அசுஸ் நிறுவனத்தின் புதிய AIO சீரிஸ் கம்ப்யூட்டர் 7.2 கிலோ எடை கொண்டிருக்கிறது.
    • புதிய அசுஸ் கம்ப்யூட்டரில் 23.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக தனது சாதனங்களை விரிவுப்படுத்தி வருகிறது. உலகளவில் அசுஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல்-இன்-ஒன் கம்ப்யுட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த வரிசையில், தற்போது புதிய AIO சீரிஸ் சக்திவாய்ந்த செயல்திறன், ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இவை கம்ப்யூட்டரை அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக மாற்றுகிறது. சக்திவாய்ந்த ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டரை வாங்குவதற்கு இந்த மாடல்கள் கச்சிதமான தேர்வாக இருக்கும்.

     

    இந்திய சந்தையில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே AIO மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த நிலை மாறி இருக்கிறது. புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் இன்டெல் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய கம்ப்யூட்டர் தலைசிறந்த சவுன்ட் கொண்டிருப்பதோடு, அசத்தலான செயல்திறன் கொண்டுள்ளது.

    புதிய A5 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR4 ரக ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி M.2 NVMe PCIe SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உயர் ரக ஆடியோ உபகரணங்கள், பிரீமியம் சப்-வூஃபர், அதிக தரமுள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசத்தலான மல்டிமீடியா அனுபவம் கிடைக்கிறது.

    டிஸ்ப்ளேவை பொருத்தவரை 23.8 இன்ச் FHD, 1920x1080, 16:9, IPS லெவல் பேனல், எல்இடி பேக்லிட் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, வின்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் துவக்க விலை ரூ. 94 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மேக் ப்ரோ அறிமுகம்.
    • 2023 மேக் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது M சீரிஸ் பிராசஸர்களுடன் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) தனது சக்திவாய்ந்த மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மேக் ப்ரோ மாடலில் M2 அல்ட்ரா சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. M2 அல்ட்ரா பிராசஸர் கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ மாடல்களின் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2023 மேக் ப்ரோ மாடல் வீடியோ எடிட், 3டி ரென்டரிங் மற்றும் அறிவியல் கணினியியல் என்று தொழில்ரீதியாக அதிக திறன் கொண்ட சாதனங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் M2 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

    M2 அல்ட்ரா பிராசஸரில் 24 சி.பி.யு. கோர்கள், அதிகபட்சம் 76 ஜி.பி.யு. கோர்கள் மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. இதன் மூலம் இந்த பிராசஸர் புதிய மேக் ப்ரோ மாடலை சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கணினியாக மாற்றியுள்ளது. இது எந்த அளவுக்கு சக்தி கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பென்ச்மார்க் டெஸ்டிங் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    அதன்படி கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில், M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 2 ஆயிரத்து 794 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 21 ஆயிரத்து 453 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. இது முந்தைய தலைமுறை மேக் ப்ரோ மாடலை விட அதிவேகமானது ஆகும்.

    முந்தைய தலைமுறை ஆப்பிள் மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1,378 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 10 ஆயிரத்து 390 புள்ளிகளையும் பெற்றது. அதன்படி புதிய 2023 மேக் ப்ரோ அதன் முந்தைய வெர்ஷனை விட சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 20 சதவதீம், மல்டி கோர் டெஸ்டிங்கில் 25 சதவீதம் அதிக திறன் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா சிப்செட்டில் இரண்டு M2 மேக்ஸ் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அல்ட்ரா-ஃபியுஷன் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2023 மேக் ப்ரோ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல்களுடன் புது மேக் மினி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அடுத்த தலைமுறை சிபியு மற்றும் ஜிபியு, அதிக மெமரி பேண்ட்வித், சக்திவாய்ந்த மீடியா என்ஜின் உள்ளது.

    M2 சிப்செட்-இல் 8-கோர் சிபியு, நான்கு அதீத செயல்திறன் கோர்கள், 10-கோர் ஜிபியு உள்ளது. இது புது மேக் மினி மாடலில் ப்ரோ-ரெஸ் அக்செலரேஷன் வழங்குகிறது. புதிய M2 பிராசஸர் ஒரே சமயத்தில் இரண்டு 8K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ, அதிகபட்சம் 12 4K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ ஸ்டிரீமிங் செய்ய முடியும்.

    இதனுடன் அறிமுகமாகி இருக்கும் புது M2 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 12-கோர் சிபியு மற்றும் எட்டு அதீத செயல்திறன் கோர்கள், அதிகபட்சம் 19-கோர் ஜிபியு, 200 ஜிபி மெமரி பேண்ட்வித் மற்றும் அதிகபட்சம் 32 ஜிபி மெமரி உள்ளது. அடுத்த தலைமுறை நியூரல் என்ஜின் M1 மாடலை விட 40 சதவீதம் வேகமானது ஆகும்.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 256 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 59 ஆயிரத்து 900

    மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 79 ஆயிரத்து 990

    மேக் மினி M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    புதிய மேக் மினி மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

    • சியோமி நிறுவனம் சீன சந்தையில் ஏராளமான புது சாதனங்களை ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • சியோமி 13 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சியோமி மினி PC அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி சியோமி பட்ஸ் 4, சியோமி 10 ஜிகாபிட் ரௌட்டர் உள்ளிட்ட சாதனங்களும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஏராளமான புது சாதனங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரை சியோமி நிறுவனம் அளவில் சிறியதாக உருவாக்கி அறிமுகம் செய்து இருக்கிறது.

    புதிய சியோமி மினி PC அளவில் 112x112*38mm ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த எடை 437 கிராம்கள் ஆகும். இதன் மெயின் பாடி அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் CNC, மெட்டல் சாண்ட்பிலாஸ்டிங் மற்றும் அனோட் ஆக்சிடேஷன் என ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சியோமி மினி PC தோற்றத்தில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

    மினி PC மாடலில் சியோமி நிறுவனம் 12th Gen இண்டெல் கோர் i5 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இத்துடன் 16 ஜிபி 3200MHz DDR4 ரேம், 512 ஜிபி PCIe NVM2 SSD, பின்புறம் 2x HDMI 2.1 இண்டர்ஃபேஸ், 1x 2.5G நெட்வொர்க் போர்ட், 1x யுஎஸ்பி 3.0 ஜென் 2, 1X யுஎஸ்பி 2.0 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 2x யுஎஸ்பி 3.0 ஜென் 2 போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி மினி PC விண்சோஸ் 11 ஹோம் சைனீஸ் எடிஷன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 100 வாட் வரையிலான பவர் இன்புட் வசதி உள்ளது. இதன் விலை 531 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரத்து 906 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் விற்பனை சீன சந்தையில் துவங்குகிறது.

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது.
    • காசோலையை கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் பெற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், பிரிண்டர் எந்திரம் வாங்க காசோலை வழங்கப்பட்டது. காசோலையை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், மாநில கபடிக்குழு பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகத்திடம் இருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஆர்.எழிலி தலைமையில் கல்லூரி பேராசிரியைகள் தமிழ்மலர், நளினி, அனுராதா, ஜெ.யுவராணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    உடன் மாவட்ட நடுவர் குழு தலைவர் நல்லாசிரியர் ஆர்.முத்துசாமி, மாவட்ட கபடிக்குழு கவுரவ உறுப்பினர் சச்சின் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பள்ளியில் காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலையில் பள்ளியை திறக்க நிர்வாகிகள் வந்தபோது பள்ளியின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி அலுவலகத்தில் சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் சி.பி.யு. மற்றும் ஹோம் தியேட்டர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டப்பட்டது.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வெளி வீதி முத்து கருப்ப பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து ராஜா (48). இவர் கீரைத்துறை, ராணி பொன்னம்மாள் தெருவில் உள்ள இரும்பு கடையில் மேலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். மர்ம நபர்கள் கடையின் ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், கீ- போர்டு, மவுஸ், கட்டிங் பிளேடு உள்பட ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×