search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பியம் பகுதியில் 359 புதிய கண்காணிப்பு கேமராக்கள்
    X

    செம்பியம் பகுதியில் 359 புதிய கண்காணிப்பு கேமராக்கள்

    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    செம்பியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 222 இடங்களில், 359 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கான கட்டுப்பாட்டு அறை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வட சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் இன்று தொடங்கிவைத்தார். இதில் துணை கமி‌ஷனர் சாய்சரண் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 3-வது கண் என்று அழைக்கப்படும் கேமராக்கள் எந்தெந்த வகையில் பாதுகாப்பாக உள்ளன என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

    Next Story
    ×