search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book festival"

    • தமிழகம் போல வேறு எங்கும் புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை என்று ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    • கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் கவின் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

    இதில் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'இந்தியா எனும் மழைக்காடு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    வாசிப்பு பழக்கத்துக்கு தமிழகத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடத்தப்படுவதில்லை. உலகம் வசிப்பதற்கு மட்டுமல்ல வாசிக்கவும் உள்ளது. புத்தகம் வைக்க இடம் இல்லாத வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீடு.

    இந்தியா பன்முகத் தன்மை நாடா என்பதை அறிய வேண்டியது நிகழ்கால தேவையாக உள்ளது. இதற்கு விடைகாணும் விதமாக சங்க இலக்கியங்களில் கூறப்படும மானுடவியல் வாழ்க்கை உள்ளது.

    சிந்துசமவெளி நாகரிக காலம் முடிகின்ற இடம் சங்க கால இலக்கியத்தின் தொடர்ச்சியாக உள்ளது. இந்தியா சங்க இலக்கியத்தில் கூறப்படும் மழைக்காடுகளை போன்றது. பல்வேறு அடுக்குகளைக் கொண்டு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டை உணர்த்துகிறது என்றார். 

    • திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
    • புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    திருச்சி :

    திருச்சியில் வருகிற 16-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 11 நாட்கள் செப்டம்பர் பதினாறு, திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புத்தகச் சுவர் திறப்பு விழா மற்றும் திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களையும், நேசிக்கும் புதிய நூல்களையும், தாமாக முன்வந்து நன்கொடையாக கொண்டு வந்து வழங்கலாம். இங்கு சேகரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது. காசு சேமித்து அதனைக் கொண்டு புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த, மண்பாண்டத்தால் செய்யப்பட்ட உண்டியல்களை, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அமைச்சர்கள் வழங்கினர்.

    மேலும், திருச்சியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    இன்று முதல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்திலும், புத்தகத் திருவிழாவிற்கான விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் அபிராமி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,

    எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், நிர்வாகிகள் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச் செல்வம், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மூக்கன், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மற்றும் பந்தல் ராமு, மணிவண்ணன், திருப்பதி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சேரும், சகதியுமாக புத்தக திருவிழா அரங்கம் மாறியது
    • கனமழை காரணமாக

    கரூர்:

    கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால், புத்தகங்கள் சேதமடைந்தன. நுழைவாயில் பகுதி சேறும், சகதியுமானதால் நேற்று மாலை வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 135 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 115ல் புத்தக அரங்குகள், காவல்துறை, மாவட்ட நூலகத்துறை, வனத்துறை, இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட அரசின் துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

    கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக புத்தகத்திருவிழா அரங்குக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் முன் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளின் உள் சுமார் 1 அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்ததில் புத்தகங்கள் வீணாகின. அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 70 கடைகள் பாதிக்கப்பட்டன.

    பொக்லைன் மூலம் நேற்று அதிகாலை வாய்க்கால் வெட்டி மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கின் முன் பாதி பகுதிகள் சேறும், சகதியுமான மாறியிருந்தன. பொக்லைன் மூலம் நுழைவாயில் பகுதியில் எம் சாண்ட் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு சேறும், சகதியும் சரி செய்யப்பட்டன. மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் அரங்கின் முன் பாதி பகுதியில் அமைந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டன.

    பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து வரவேண்டாம் என தகவல் அளிக்கப்பட்டது. மேலும் விடுமுறை நாள் என்பதால் புத்தகத் திருவிழாவை காண வந்த பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிந்தனை அரங்க பகுதிகள் மண் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவு பெற்ற பிறகு மாலை புத்தகத் திருவிழாவுக்கும், திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்திற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • புத்தக திருவிழாவில் மக்கள் குவிகின்றனர்
    • ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கரூர்:

    கரூர் திருமாநிலையூரில் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் அரங்கம், குறும்பட திரையரங்கம், கோளரங்கம், சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம், உணவரங்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சிந்தனை நிகழ்ச்சியில், படிப்பறிவே, பட்டறிவே என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் மண்மணம் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வையிட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    • புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது

    கரூர்:

    கரூர் புத்தக திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய புத்தக திருவிழா அரசு விழாவாக நாளை (19-ந் தேதி) தொடங்கி வரும் 29 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    குறிப்பாக 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணிவரை நற்சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர்.

    மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பேருந்து வசதி, குடிநீர் வசதிகள், ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த மாபெரும் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), பொதுபணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சச்சிதானந்தம், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    • செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 9 -வது உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    வரும் செப்டம்பர் 16 முதல் 25ந் தேதி வரை 9-வது உடுமலை புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வரும் 17ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு உடுமலை தளி ரோடு தேஜஸ் மஹாலில் நடைபெற உள்ளது. வரவேற்பு குழு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு 9 -வது உடுமலை புத்தகத்திருவிழா சிறப்பாக நடத்து வதற்கான மேலான வழிகாட்டுதல்களை ஆலோசனை களை வழங்க உடுமலை புத்தகாலயம் சார்பில்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது அதேநாளில் தென்காசி புத்தகத் திருவிழாவும் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்பட்டோட்டர் நல அலுவலர் குணசேகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஏடிபிசி சீவல முத்து, டாக்டர் அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்கள் இளமுருகன் , மாரியப்பன் கிளை நூலகர் சுந்தர் கலந்து கொண்டனர்.

    கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான புத்தகப்பரிசு சான்றிதழ் 270 பேர்களுக்கு வழங்கப்பட்டது.புத்தக திருவிழாவில் சிறப்பாக பணி ஆற்றிய 150 அரசு அலுவலர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


    புத்தக திருவிழாவிற்கு இதுவரை 1,02,415 பேர் வருகை தந்துள்ளனர். ரூ.51 லட்சத்திற்கும் மேலான மதிப்பில் நூல்கள் விற்பனையும் நடந்து உள்ளது. தென்காசி மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பபாசி நிறுவனத்தார் இதர பதிப்பகத்தார், விற்பனையாளர்கள், பொதுமக்கள், வாசகர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தென்காசி மாவட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

    • புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடக்கும் புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை, அரியாணி பட்டி, மஞ்சப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கந்தர்வ–கோட்டை வட்டார கல்வி அலுவலர் வெங்க–டேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்விஜய–லட்சுமி முன்னிலை வகி–த்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது
    • வரும் 19-ந் தேதி தொடங்குகிறது

    கரூர்:

    கரூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு கலெக்டர், த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில்,

    கரூர் மாவட்ட வரலாற்றில் முதல்முறையாக அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா வரும் 19 -ந் தேதி தொடங்கி 29 -ந் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கரூர் திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு 100 அரங்குகள் மற்றும் கூட்டரங்குகள் அமைக்கப்படும். கூட்டரங்கில் 1,000 பேர் பங்கு பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைப்பதற்கு ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளன.

    காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள். மாலை 6 மணி முதல் 8 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட பலர் பங்கு பெறக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    புத்தகத் திருவிழாவில் 11 நாட்களில் 2 லட்சம் பேர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகள், பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளன.

    புத்தக திருவிழா சிறப்பாக அமைய கரூர் மாவட்ட பொதுமக்கள், பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலமெடுப்பு) கோட்டாட்சியர்கள் (கரூர்) ரூபினா, (குளித்தலை) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், வாசகர் வட்ட நிர்வாகி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவை சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    சூரம்பட்டி:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திரு விழா உள்ள நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக திருவிழா 18 வது ஆண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை )முதல் வருகிற 16 -ந் தேதி வரை இந்த புத்தக திரு விழா நடக்கிறது .

    இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .அமைச்சர் முத்துசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே .எம் மயிலானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் . மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகிறார்.

    இந்த விழாவை சென்னை யில் இருந்து முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ .ஆகியோர் வாழ்த்து பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

    • 22-ந் தேதி தொடங்குகிறது
    • 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை:-

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா), கோவை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6-வது ஆண்டாக கோவை புத்தகத் திருவிழா வருகிற 22- ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது.

    2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. 10 நாள் நடைபெறும் விழாவில் 300 பதிப்பாளர்கள் மற்றும் 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக வருகிற 28-ந் தேதி 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் ஒப்பிக்க உள்ளனர்.

    புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் புதுடெல்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். லட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது

    22-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவை புத்தகத் திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
    • புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன.

    நாமக்கல்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் புத்தகத் திருவிழாவை நடத்துவது தொடா்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது-

    விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவா்களைப் போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திர போராட்ட வீரா்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பது பற்றியும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

    கல்வி வளா்ச்சியில் புத்தகங்களின் பங்கு மிகு முக்கியமானதாகும். புத்தகங்கள்தான் சாதாரண குடிசை வீட்டில் பிறந்தவா்களை கூட உலகறிந்த அறிஞா்களாகவும், தலைவா்களாகவும், சிந்தனையாளா்களாகவும், உயா் அதிகாரிகள், ஆட்சியா்களாகவும் உருவாக்கி உள்ளன. தினந்தோறும் புத்தகங்களை வாசிப்பது வாழ்வின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன.

    அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அமுத பெருவிழாவுடன் சோ்ந்து புத்தகத் திருவிழாவும் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறந்த பதிப்பதகத்தாரின் தலைசிறந்த எழுத்தாளா்கள் எழுதிய நூல்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

    ×