search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்
    X

    புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்

    • புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது

    கரூர்:

    கரூர் புத்தக திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய புத்தக திருவிழா அரசு விழாவாக நாளை (19-ந் தேதி) தொடங்கி வரும் 29 வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    குறிப்பாக 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணிவரை நற்சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர்.

    மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பேருந்து வசதி, குடிநீர் வசதிகள், ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்த மாபெரும் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), பொதுபணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சச்சிதானந்தம், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×