search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday celebration"

    • திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
    • திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கத்தில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் சமேதி சீனிவாசன் பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள மதத்தை மாற்றிய மகான் பாஷைக்காரர் உடையவர் எத்திராஜ் என்று பல பெயர்களால் போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர் சுவாமி 1006-ம் ஆண்டு பிறந்த நாளை சித்திரை மாதமான திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதி களிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கிருமா ம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீரா மானுஜர் சுவாமிக்கு பால், தயிர்,தேன் பன்னீர், சந்தான அபிஷே கத்தூள் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து எம்பெ ருமான் ஸ்ரீ ராமா னுஜர் அவர்க ளுக்கு பூக்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் சுவாமியை வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்க ப்பட்டது இந்த ஏற்பாட்டினை திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
    • கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கந்தர்வகோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, நகரச் செயலாளர் அய்யா. செந்தில் குமார், மாவட்ட பாசறை அருண் பிரசாத், எம்.ஜி.ஆர். மன்றம் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், சாமிநாதன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணர் ஜெய்சங்கர் தலைமையில் மாலை அணிவித்தனர்.


    • அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, மக்கள் தேசம் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பேரவையின் சார்பில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகி சேரன்யாக்கோப்பு, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் சமூகஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கார் பிறந்த நாள் விழா, பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது.

    இதில் அண்ணாதுரை, டாக்டர் ராஜ்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ,பாலாஜி ஈஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர்  10 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    இதில் தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், முன்னாள் சபாநாயகர் செல்வம், தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, சண். குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சன். சண்முகம், கோகுல், தர்மராஜ், ரவிச்சந்திரன்,

    இளம்பரிதி, பழநி, பிரபாகரன், கோபால–கிருஷ்ணன், நர்கீஸ், தொகுதி கழகச் செயலாளர்கள் சக்திவேல், திராவிடமணி, சீத்தாராமன், தியாகராஜன், பாண்டு அரிகிருஷ்ணன், சவுரிராஜன், ராஜா–ராமன், நடராஜன், சக்திவேல், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், பார்த்திபன், இளஞ்செழியப்பாண்டியன், மணிகண்டன், அசோக், சிறப்பு அழைப்பாளர் முகிலன், மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள் கோபாலுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து அண்ணா சாலையில் ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவும், சின்னப்பொய்கை, பாரதிபுரம் உள்ளிட்ட உருளையன்பேட்டை தொகுதியின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு சைவ உணவும் வழங்கினார்.

    தொடர்ந்து செயின்ட் தெரசோ வீதியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி–னார்.

    • நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள்.
    • அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள்.

    என்னத்த சொல்ல... என்று வடிவேலு பாணியில் தலையில் அடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

    பிறந்த நாள் என்றால் புதிய ஆடை அணிவார்கள். கோவில்களுக்கு செல்வார்கள். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுவார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி 'ஹேப்பி பர்த் டே' பாடுவார்கள். உற்சாகத்தில் கேக்கை எடுத்து முகத்தில் பூசுவார்கள். வாசனை நுரையை பீய்ச்சி அடித்தும் மகிழ்வார்கள்.

    எங்காவது யாராவது உடலெல்லாம் சாணத்தை பூசியும், முட்டையை வீசியும் கொண்டாடுவதை கேள்விபட்டிருக்கிறோமா? இப்படியும் கொண்டாடுபவர்களை என்ன சொல்வது? கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு, அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் தங்களில் யாருக்காவது பிறந்த நாள் என்றால் பொது வெளியில் இப்படித் தான் கொண்டாடுவார்களாம்.

    நேற்று கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிறந்த நாள். நண்பர்கள் காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்து இருக்கிறார்கள். அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள். கேக் வந்தது, ரோட்டோரமாக தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு ஸ்டூலை போட்டு அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்திகளையும் ஏற்றினார்கள்.

    மாப்பிளே... கேக்கை வெட்டுடா என்றதும் அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டினார்.

    அவ்வளவுதான்... சுற்றி நின்ற நண்பர்கள் சரமாரியாக முட்டைகளை எடுத்து வீசினார்கள். உடல் முழுவதும் முட்டை கருக்கள் வடிந்தது.

    சிலர் முட்டையை எடுத்து அவரது முகத்திலும் தேய்த்துவிட தவறவில்லை.

    அதோடு விடவில்லை. பக்கெட்டுகளில் தயாராக கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை எடுத்து தலையில் ஊற்றி சாணத்தில் குளிக்க வைத்தார்கள்.

    சிலர் சாணத்தை எடுத்து வீசினார்கள். இன்னும் சிலர் சாணத்தை முகத்திலும் பூசினார்கள்.

    பிறந்த நாள் கொண்டாடிய அந்த மாணவரின் உடல் எப்படி இருந்து இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.

    ஒரு படத்தில் வடிவேல் மீது மறைந்து இருந்து காய்களை வீசி கலாய்ப்பார்கள். அப்போது அங்கு அரிவாளுடன் வந்தவரை தனக்கு கேடயமாக்கி என் தலைவர் வந்துட்டாருல்ல... இனி வீசி பாருங்கடா என்றதும் மறைந்திருந்து சாணத்தை முகத்தில் அடிப்பார்கள். அதை முகர்ந்து பார்த்த வடிவேல் சீ.. கர்மம்... கர்மம் என்பார். கிட்டத்தட்ட அதே பாணியில்தான் அந்த வாலிபரும் அவ்வப்போது தனது முகத்தில் வந்து விழுந்த சாணத்தையும் முட்டையையும் துடைத்தபடி நாற்றத்தால் முகத்தை சுளித்துக் கொண்டார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா என்று சொல்லி சென்றார்கள்.

    'தேய்கின்றது பொன்மாலை நிலா... தேயாதது நம் ஆசை நிலா... இது வானம் போலே வாழும் பாசம்' என்ற பாடலை வேறு பாடிக்கொண்டு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆட்டமும் போட்டுக் கொண்டார்கள். இதை செல்லில் பதிவு செய்த யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றி உள்ளார். அது வைரலாகி வருகின்றது.

    • மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் தொரை கொடியேற்றி வைத்தார். ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, மாவட்ட பிரதிநிதி தம்பி இஸ்மாயில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நகர துணை செயலாளர் ரீட்டாமேரி பர்னபாஸ், நகர பொருளாளர் அணில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், ஜெயராமன், மார்கெட் ரவி, தியாகு, சசிகுமார், ராஜன், அமலநாதன், மல்லிகொரை மூர்த்தி, தர்மராஜ், ஆல்துரை, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கஜேந்திரன், விஷ்னு, ரகுபதி, கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பர்னபாஸ், வெங்கடேஷ், ஸ்டான்லி, பாபுராஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், பௌ்ளன், செல்வம், காளி, மாதன், ராஜேஷ் மற்றும் இளைஞர் அணியினர் விவேக், மீன்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கிய சேர்மன்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

    இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், நெமிலி பேரூர்கழக செயலாளர்.ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்.பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர்.ரேணுகாதேவி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் திரு.அப்துல் நசீர், ஒன்றிய கழக நிர்வாகிகள் புருஷோத்தமன், பாண்டியன், சங்கர், ஜெயச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், பெருமாள், நெமிலி பேரூர் கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், சுகுமார், சேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    நத்தக்காடையூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எஸ்.இளங்கோ தலைமை தாங்கினார். காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில் பழையகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் ராசு சண்முக சேகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், எம்.கே.குமாரசாமி, சிவு சென்னியப்பன், என்.பொன்னுச்சாமி, தம்பி பழனிச்சாமி, ஜெயபிரகாஷ், ஆர்.எஸ். கலைமணி, மளிகை சுப்பிரமணி தங்கவேல், வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
    • தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     பல்லடம் :

    பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    • பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட்டில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக்கு பா.ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் நிகழ்ச்சியில் வாஜ் பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

    பிறகு மடுகுபேட்டில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன், மாநில மீடியா பொறுப்பாளர் குருசங்கர்,பட்டியல் அ ணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள்குமார், மடுகுப்பை பகுதியின் முக்கிய பொறுப்பாளர் விஜய், பூபதி கலந்து கொண்டனர்.

    மனதின் குரல் நிகழ்ச்சியின் போது லாஸ்பேட் மண்டல தலைவர் சோமசுந்தரம் பொறுப்பாளர் தண்டபாணி மகளிர் அணி, மாநில பொதுச் செயலாளர் கனகவல்லி குமார் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    • ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி : 

    ஊத்துக்குளி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு ஊத்துக்குளி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊத்துக்குளி வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் காளிதாஸ், ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
    • பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    மேலும் மாநகரில் பல்வேறு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு, பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி இணைச் செயலாளர் முருகேஷ் பாண்டியன், பாளை பகுதி இளைஞர் அணி செயலாளர் கே .எஸ். ராஜா, தொண்டரணி பொறுப்பாளர் மாரியப்பன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் நாதன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மல்லர், மாணவர் அணி பொறுப்பாளர் முத்து பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    ×