என் மலர்
நீங்கள் தேடியது "john pandian"
- ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
- பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும் மாநகரில் பல்வேறு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு, பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி இணைச் செயலாளர் முருகேஷ் பாண்டியன், பாளை பகுதி இளைஞர் அணி செயலாளர் கே .எஸ். ராஜா, தொண்டரணி பொறுப்பாளர் மாரியப்பன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் நாதன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மல்லர், மாணவர் அணி பொறுப்பாளர் முத்து பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் ஜூலை 15-ல் தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான பிரசாரத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கோவில்பட்டிக்கு வந்தார். அவர் சங்கரலிங்கபுரம், அரசு போக்குவரத்து கழகம் முன், புளியம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 15-ம் தேதி தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் முடித்துள்ளேன். தற்போது தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்கிறேன். தேவேந்திரர் குல வேளாளர்களுடைய பல உட்பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரர் குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என முன்னிறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் வழக்கில் சரியான தீர்ப்பு அல்ல. இது தவறான சட்டத்துக்கு முன் உதாரணமாகும். சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பது தான் எங்கள் கருத்து. தலைமை நீதிபதியும், நீதிபதியும் சேர்ந்து வெவ்வேறு கருத்துகளை பரிமாற்றம் செய்து, அது 3-வது பெஞ்சுக்கு போனால், மக்களை திசை திருப்புவதற்காக முடிவு செய்யா முடியாத நிலையில் சட்டம் இருக்கும் என்றால், மக்கள் எப்படி நீதிமன்றத்தை நாடுவது என்பது எங்கள் கேள்வி. நீட் என்பது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்காக உயிரை மாய்த்து கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #johnpandian #18mlas #chennaihighcourt