search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க., அரசு வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை- ஜான் பாண்டியன்
    X

    தி.மு.க., அரசு வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை- ஜான் பாண்டியன்

    • பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.
    • மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது.

    திருப்பூர்:

    தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் திருப்பூர் சிவன் தியேட்டர் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது ஜான்பாண்டியன் பேசியதாவது:-

    தேவேந்திர குல வேளாள மக்கள் எத்தனை பேருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலையும், சலுகையும் கொடுத்துள்ளன. இப்படிப்பட்ட நிலையை மாற்ற வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு சட்டம். பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு சட்டம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான். மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது. தமிழக கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள பிரச்சனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஜாதியின் பெயரை வைத்து திரைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் மற்றொரு சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவது தவறான முன்உதாரணம். அதுபோன்ற திரைப்படங்களை அரசு தடை செய்ய வேண்டுமேயன்றி, அதை ஊக்குவிக்கக் கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×