என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
- கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது
- கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கவிதா சிவா, நகரச் செயலாளர் அய்யா. செந்தில் குமார், மாவட்ட பாசறை அருண் பிரசாத், எம்.ஜி.ஆர். மன்றம் செல்லத்துரை, வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், சாமிநாதன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணர் ஜெய்சங்கர் தலைமையில் மாலை அணிவித்தனர்.
Next Story






