search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
    X

    அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட காட்சி. 

    பல்லடத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

    • அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, மக்கள் தேசம் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பேரவையின் சார்பில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகி சேரன்யாக்கோப்பு, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் சமூகஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கார் பிறந்த நாள் விழா, பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது.

    இதில் அண்ணாதுரை, டாக்டர் ராஜ்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ,பாலாஜி ஈஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×