என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலியில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களை வழங்கிய சேர்மன்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில், நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நெமிலி பேரூர்கழக செயலாளர்.ஜனார்த்தனன், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்.பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர்.ரேணுகாதேவி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் திரு.அப்துல் நசீர், ஒன்றிய கழக நிர்வாகிகள் புருஷோத்தமன், பாண்டியன், சங்கர், ஜெயச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், பெருமாள், நெமிலி பேரூர் கழக நிர்வாகிகள் கார்த்திகேயன், சுகுமார், சேகர், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.






