search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BHUMI PUJA"

    • ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பெருமாந்தாங்கல் -வடமணபாக்கம் இடையே ரூ.2 கோடி மதிப்பில் புதிய தார் சாலை போடுவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜு தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய தார் சாலை போடும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் நாவல்பாக்கம் வி. பாபு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஜே. சி.கே. சீனிவாசன், எம். தினகரன், என். சங்கர், ஏ.ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பெருமாள் கோயில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் பழுதடைந்தது இருந்தது.

    வகுப்பறை கட்டிடங்கள் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்ட ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவேன் என கூறியிருந்தார்.

    அதன் பேரில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

    இதில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் 15 வது நிதி குழு மானியம் 2020- 23 திட்டத்தின் கீழ் பசுபதிபாளையம் கிராமத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி , காவலிபாளையத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி என மொத்தம் ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    • ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
    • கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    குத்தாலம்:

    கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாராப்பூர் ஊராட்சியில் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் உள்ள குறும்பலூர் கிராமத்தில் சுமார் 250 குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்க சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குறும்பலூர் கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவரது சொந்த செலவில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி துணை தலைவர் சித்ரா சுப்பையா, ஊர் முக்கியஸ்தர்களான வி.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், ஆறுமுகம், வழுக்கையன், சின்னையா, சுப்பையா, கவுன்சிலர்கள் பழனிச்சாமி, வேங்கையன், ஆறுமுகம், சக்திவேல், ராசு, கரகமாடி சின்னையா, அழகு, பூசாரி மச்சக்காளை, சின்னையா, வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சொந்த செலவில் சடையம்பட்டி கிராமத்தில் 2, குறும்பலூர் கிராமத்தில் 4, வாராப்பூர் கிராமத்தில் 1 குளியல் தொட்டியும், இந்த பகுதியில் பகுதிநேர ரேசன் கடை கட்டிடங்களும் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் வாக்குறுதி அளித்தார்.

    • வள்ளுவக்குடியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
    • ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன் படி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.42லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் முருகன், ஊரட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

    • ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம், பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து.

    கழிவுநீர் கால்வாய் உயர்த்தி தளம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பணா, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.எம். முனிரத்தின எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    அப்போது தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு பணி செய்ய வேண்டும்.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளூர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

    முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.அப்போது காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ராஜா, காங்கிரஸ் பட்டறை மணி, ஒப்பந்ததாரர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
    • 25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

    மாநிலத் தலைவர் மூர்த்தி, வழக்கறிஞர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு சிலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்ரமணியன், அன்பான ந்தம், வேலூர் முருகேசன், சங்கர், திருவண்ணாமலை சுப்பிரமணியம், தஞ்சை முனிசிபல் காலனி நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் தலைவர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவ சிலை அமைக்க அனுமதி கொடுத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கே .என். நேரு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணிக்காக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த மேயர் சண். ராமநாதனுக்கும் நன்றி. மாமன்னர் சிலையானது ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    25 அடி உயரத்திற்கு சிலை அமைய உள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிவு அடைந்ததும் சிலையை விரைவில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.

    • பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
    • சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    இதில் துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சி.எல்.சரவணன், ஆறுசரவணன், மகேஷ், மதியழகன், ஒப்பந்ததாரர்கள் தனசேகர், அமுதன் மற்றும் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே. ஏ.குணசேகரன், ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.செல்வி தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எம். நேரு வரவேற்றார், ஒன்றிய செயலாளர் கே எஸ் ஏ மோகன்ராஜ் முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டு ஏ.நல்லதம்பி எம்எல்ஏ மாவட்ட கவுன்சில் கே.ஏ. குணசேகரன் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உதயகுமார், ஆர் தசரதன், அவைத்தலைவர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன், நகர துணைச் செயலாளர் சீனிவாசன், ஆர்வில் ராஜவேல், அமுதா ரவி, காவிதா, சிலம்பரசன். கலைவணன் அருணக்கலம், வில்வநாதன், லட்சுமணன், விஜயலட்சுமி காளிமுத்து, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ×