search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோமல் கிராமத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமிபூஜை
    X

    கோமல் கிராமத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    கோமல் கிராமத்தில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமிபூஜை

    • ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
    • கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    குத்தாலம்:

    கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×