என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Benjamin Netanyahu"
- இந்தத் தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு, யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.
- மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கும் மேல் நேதன்யாகுவின் லிகுட் கட்சி வென்றது.
புதுடெல்லி:
இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதமரானார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து நேதன்யாகு விலகியதை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.
இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன. இதனால் அந்நாட்டின் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, இஸ்ரேலில் சமீபத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும்.
இத்தேர்தலில் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கும் மேல் நேதன்யாகுவின் லிகுட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு தேர்வாகிறார். விரைவில் அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக தேர்வாகியுள்ள பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிரதமர் நரெந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியா-இஸ்ரேல் மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்த எங்களின் கூட்டு முயற்சிகளைத் தொடர எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பிராந்தியமான காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்வந்தது. 2 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
இந்த போர் நிறுத்த முடிவு இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணி அரசில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராணுவ மந்திரி அவிக்டோர் லீபர்மென் தனது பதவியை ராஜினாமா செய்தார். மந்திரி சபையின் இந்த நடவடிக்கை ‘பயங்கரவாதத்திடம் சரணடைவது’ என்று அவர் சாடினார். ராணுவ மந்திரியின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் தீவிரமடைந்ததையடுத்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மந்திரிகள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது பிரதமர் நேட்டன்யாஹூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நேட்டன்யாஹூ தொலைக்காட்சி நேரலையில் தோன்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூட்டணி அரசு பிளவுபடுவதை தவிர்க்கும் விதமாக ராணுவ மந்திரி பொறுப்பை தான் ஏற்பதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி பேசிய அவர், “இப்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் இக்கட்டான சூழலில் ஆட்சியை கவிழ்ப்பது சிக்கலாகும். எனவே தேர்தல் முன்கூட்டியே நடக்காது. அப்படி செய்தால் அது பொறுப்பற்ற செயல் ஆகும்” என கூறினார்.
மேலும், கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார்.
இஸ்ரேலின் பூர்வீக குடிகளாக கருதப்படும் ஜெவிஸ் சமூகத்தினருக்கு மட்டுமே அந்நாட்டின் சுய உரிமை அளிக்கப்படுவதாக புதிதாக சட்டம் இயற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் அரபி மொழி அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வாழும் அரேபியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு வாழும் அரேபியர்கள் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு இவர்கள் இங்கு குடியேறியதாகவும் தெரிகிறது.
இஸ்ரேல் அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ட்ரஸ் எனப்படும் இஸ்ரேலில் வாழும் பழங்கால அரபியர்கள் கடந்த வாரம் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்த சட்டம் குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த சட்டத்தின் மூலமே ஜெவிஸ் மக்களின் சுய உரிமைகள் பாலஸ்தீன அரேபியர்களால் தடுக்கப்படுவதை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் டெல் அவிவ் என்ற இடத்தில் மாபெரும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சட்டம், இனவாதத்தை சட்டப்பூர்வமாக்குவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். #Isreal
யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.
’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Netanyahucorruption #Netanyahuquestioned
‘பிபா 2018’ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இறுதி ஆட்டம் வரும் 15-ம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தை காண பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்கள் ரஷியா வருகின்றனர். அவ்வகையில், மாஸ்கோ நகருக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் 11-ம் தேதி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதேபோல், இறுதிப்போட்டியை காணவரும் கத்தார் நாட்டு மன்னர் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PutinNetanyahumeet
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு போலி செலவு கணக்கு காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருந்தது.
இந்நிலையில், சாரா மற்றும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் எஸ்ரா சைடாப் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வரிபணத்தை தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் நேதன்யாகு மனைவி சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது.
68 வயதாகும் நேதன்யாகு 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார். அவர் மீதும் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவைதொடர்பாக, அவரது பதவி காலத்தில் இம்மாதிரியான பல விசாரணைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SaraNetanyahu #BenjaminNetanyahu
யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அணு ஆயுதம் தயாரிக்க தயாராகும் ஈரானின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு அளித்த வீடியோ பேட்டியில், ‘ஈரான் நாட்டின் தலைவர் அயாத்துல்லா கமேனி இருநாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின்போது இஸ்ரேலை அழிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். வரிசையாக அணு குண்டுகளை தயாரிக்கும் விதத்தில் அளவுக்கதிகமான யூரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் இதை செய்து முடிக்கப் போவதாக நேற்று அவர் தெரிவித்தார்.
எனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் அரசின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனினும், ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார். #Iran #IsraelPM #BenjaminNetanyahu
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 14-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது என அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொரால்ஸ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் 70 வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக மே மாதம் டெல் அவிவ் நகரில் உள்ள கவுதமாலாவின் தூதரகம் மாற்றப்பட்டு ஜெருசலேம் நகரில் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜெருசலேம் நகரில் கவுதமாலா தூதரகத்தை இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தூதரகத்தை திறந்து வைத்து பேசிய ஜிம்மி மொரால்ஸ், மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களது தூதரகத்தை ஜெருசலேமில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வெளிநாட்டு பயணமாக கவுதமாலா செல்லப்போவதாக அறிவித்தார்.
1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவாகிய போது அதை அங்கீகரித்த இரண்டாவது நாடு கவுதமாலா, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அங்கு தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடும் கவுதமாலா என்பது குறிப்பிடத்தக்கது. #JimmyMorales #BenjaminNetanyahu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்