search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia president"

    • போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியானது.
    • உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷியா தன் வசப்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு ராணுவம், ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

    இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏற்கனவே போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தற்கொலை தாக்குதல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக தி மிரர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். ரஷிய ராணுவத்தால் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை. இதுரை ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதலை திறம்பட செய்ய முடியவில்லை. இதனால் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    • கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.
    • வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் புதின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை வருகிற மார்ச் 5-ந்தேதி தொடங்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

    • ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.
    • நம் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வானதை அடுத்து ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக பதவியேற்கிறார். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின், ஜின்பிங்கிடம் கூறியுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் தெரிவித்துள்ளது.

    மேலும், ஜின்பிங் செழிப்பாகவும், புதிய வெற்றிகளை பெற விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புதின் தெரிவித்துள்ளார்.

    • இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
    • இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

    உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    உக்ரைனில் உள்ள டாநட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.

    • புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி மோடி கூறியது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
    • சர்வதேச சமூகத்தில் இருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

    உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

    இன்றைய சகாப்தம் போருக்கான காலம் அல்ல. இதை பற்றி நான் உங்களிடம் தொலைபேசியில் பேசினேன் என்றார். அதற்கு பதிலளித்த புதின், உங்கள் கவலைகள் பற்றி எனக்கு தெரியும். இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

    புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி மோடி கூறியது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உக்ரைனில் புதின் என்ன செய்து வருகிறார் என்பதில் அவருக்கு முழு அனுதாபம் கிடைக்கவில்லை என்பது உஸ்பெகிஸ்தானில் இந்தியா, சீனா ஆகிய இரு தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன் என்றார்.

    அப்போது இந்தியாவை போல் மற்ற நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக மாற்றிக் கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று ஜான் கிர்பியிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த ஜான் கிர்பி கூறும் போது, சர்வதேச சமூகத்தில் இருந்து புதின் தன்னை மேலும் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். உக்ரைனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து, ரஷியாவுடன் வழக்கம் போல் வர்த்தகத்தை செய்ய வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நம்பவில்லை.

    ரஷியாவிடம் வணிகம் செய்வது சரி என்று எப்படி தீர்மானிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. புதினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள்கூட உக்ரைனில் அவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. அங்கு நடப்பது முற்றிலும் கொடூரமானது.

    புதின் மற்றும் அவரது வீரர்கள் மிக மோசமான முறையில் என்ன செய்தார்கள் என்பது பற்றி சர்வதேச சமூகத்தின் மற்றவர்களுக்கு மேலும் தெளிவாக தெரிவிக்கிறேன் என்றார்.

    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கூறும்போது, உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள் பற்றி சர்வதேச அளவில் உள்ள கவலைகளை சீனா, இந்தியா தெரிவித்துள்ளது. இந்த போர் உக்ரைன் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

    ரஷியாவின் போரால் உணவு பாதுகாப்பில் சவால்கள் ஏற்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் உணர்வும் ஒன்றாக உள்ளது. இந்த போர், மக்களின் நலன்களுக்கு எதிரான வெளிப்பாடு. இது போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.

    புதினிடம் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியதற்கு, இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

    • புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது.

    சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர். புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

    இதனால் புதின் சென்ற காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் காரில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றும் கடந்த 2017-ம் ஆண்டு புதின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சீனா மற்றும் இந்தியாவுடனான ரஷியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
    • மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம்.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில், ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு ஆதரவாக உள்ள ரஷ்ய உலகம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வெளியுறவுக் கொள்கையை அந்நாடு செயல்படுத்த உள்ளது. இதற்கு அதிபர் புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது ​​ரஷ்யாவிற்கு வெளியே புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளில் வசித்த சுமார் 25 மில்லியன் ரஷிய மக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் நலன்கள் மற்றும் ரஷ்ய கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஆதரவை ரஷிய வெளியுறவுக் கொள்கை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய ஆசியா வரை முன்னாள் சோவியத்யூனியன் இருந்த இடத்தை ரஷியா தனது சட்டபூர்வ செல்வாக்கு மண்டலமாக தொடர்ந்து கருதுவதாக அந்நாட்டு புதிய வெளியுறவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரஷியாவிற்கு ஆதரவாக இருக்கும் சீனா மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் புதிய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2008 ஆண்டு ஜார்ஜியாவிற்கு எதிரான போருக்குப் பிறகு மாஸ்கோவால் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஜார்ஜியப் பகுதிகளான அப்காசியா மற்றும் ஒசேஷியாவுடன் ரஷியா தனது உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றுடன் ரஷியாவின் உறவை வலுப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய வெளியுறவுக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன. 

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 11-ம் தேதி மாஸ்கோ நகரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
    ஜெருசலேம்:

    ‘பிபா 2018’ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இறுதி ஆட்டம் வரும் 15-ம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தை காண பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்கள் ரஷியா வருகின்றனர். அவ்வகையில், மாஸ்கோ நகருக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் 11-ம் தேதி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

    இதேபோல், இறுதிப்போட்டியை காணவரும் கத்தார் நாட்டு மன்னர் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PutinNetanyahumeet 
    ×