search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ben stokes"

    • ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன்.
    • இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.

    ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    • முதல் இரண்டு போட்டிகளிலும இங்கிலாந்து வெற்றி
    • 3-வது போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

    • டோனி டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
    • வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

    2-வது போட்டியில் 371 ரன்களை துரத்தும் போது ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்டதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்தை பென் டூக்கெட் உடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் போராடினார். அதில் பென் டூக்கெட் 82 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜானி பேரஸ்டோவும் சர்ச்சைகுரிய வகையில் அவுட் ஆகி வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.

    இருப்பினும் மறுபுறம் மனம் தளராமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ல் ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக 135* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றியதை போல் இங்கிலாந்தை வெற்றி பெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது. இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 9 சிக்க்சருடன் 155 ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் தோற்றது. இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார்.

    இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி அழுத்தமான சமயங்களில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனேயே விளையாடுவார்கள். ஆனால் மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் மற்றவர்களை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ் தம்மால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புகளை தேடுகிறார். அது போன்ற சூழ்நிலைகளில் அசத்தும் வீரர்களை நினைத்தால் எனக்கு டோனி தான் முதலில் நினைவுக்கு வருவார். குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.

    அந்த வகையில் வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு 2019 ஹெண்டிங்க்லே போட்டியை நினைவுப்படுத்தியது. முதலில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தவறை விட்டதைப்போல 116 ரன்களில் இருக்கும் போது மார்க்கஸ் ஹரிஷ் தவற விட்டார். அதனால் அதே போல இப்போட்டியிலும் அவர் வெற்றியை பறித்து விடுவாரோ என்ற பயம் எங்களது மனதிற்குள் இருந்தது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.

    • கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று பென் ஸ்டோக்ஸ் விமர்சித்தார்.
    • நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம் என்று பேட் கம்மின்ஸ் ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் வெளியேறியதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். சொல்லப்போனால் போட்டி முடிந்த பின் தங்களுடைய பெவிலியின் நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் எம்சிசி அமைப்பின் சில உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்தார். மேலும் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று பேட்ஸ்மேனை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ஓகே நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம். என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

    இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிக்கை வெளிப்படையாக கலாய்த்துள்ளது. குறிப்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் டப்பாவை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கோப்பையை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கையை நிறுவனம் கலாய்த்துள்ளது.

    முன்னதாக 1890-களில் இங்கிலாந்து பத்திரிக்கை இவ்வாறு தங்களது அணியை பகிரங்கமாக விமர்சித்ததே ஆஷஸ் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
    • 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.


    இப்போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 24 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*

    ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999

    டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009

    அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017-ல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அத்துடன் இப்போட்டியில் 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. பென் ஸ்டோக்ஸ் : 33*

    2. கெவின் பீட்டர்சன் : 24

    3. இயன் போத்தம் : 20

    4. ஸ்டீவ் ஸ்மித் : 19

    • எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி சுழபமாக வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனையடுத்து பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடினார். அணியின் ஸ்கோர் 193 ரன்கள் இருந்த நிலையில் பேர்ஸ்டோவ் சர்ச்சை முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா அணியினர் ரன் அவுட் கிளைம் செய்த போது நான் களத்தில் இருந்த நடுவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லை என்றபடியே எனக்கு தலையசைத்து சொன்னார். இருப்பினும் வழக்கம் போல மூன்றாம் நடுவரிடம் முடிவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடைசியில் அவுட் என்று வந்துவிட்டது.

    மூன்றாம் நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் நான் பந்துவீச்சு பக்கம் இருந்திருந்தால் என்னுடைய கேப்டன்ஷியில் இத்தகைய செயல் செய்வேனா என்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்திருப்பேன். ஒருபோதும் இப்படி செய்து வெற்றிகளை பெறுவதற்கு முயற்சி செய்திருக்கமாட்டேன். எல்லாம் விதிகளுக்கு உட்பட்டு நடந்திருப்பதாக பார்க்கிறேன்.

    இதே போன்ற சூழலில் 2019-ம் ஆண்டு ஹெட்டிங்லேயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரா டெஸ்டில் அணிக்கு வெற்றி தேடித்தந்தேன். துரதிர்ஷ்டவசமாக இங்கு அது மாதிரி நடக்கவில்லை. இப்போது நாங்கள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறோம். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டில் வெற்றி பெற்றோம். நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்றோம். அதே போல் இந்த தொடரில் எஞ்சிய 3 போட்டிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லபுசேன் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்
    • ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்

    ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நேற்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஜோ ரூட்டின் (118 நாட்அவுட்) அபார சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றயை முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 8 ரன்னுடனும், கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பிராட் அடுத்தடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்துக்கு முன்னணி கொடுத்தார்.

    நம்பிக்கை வீரரான ஸ்மித் அடுத்து களம் இறங்கினார். அவரை 16 ரன்னில் எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். இதனால் 67 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது.

    உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 40 ரன்களுடனும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி சிறந்த பார்ட்னர்சிப் அமைத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தும். இல்லையெனில் நெருக்கடியை எதிர்கொள்ளும்.

    • இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
    • அதிக அளவில் யோசித்தால் நெருக்கடிதான் ஏற்படும்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-2 என 2015-ல் வீழ்த்தியது. அதன்பின் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அதேவேளையில் 2017-18 மற்றும் 2021-22-ல் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வென்றுள்ளது.

    பழைய வரலாறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'பாஸ்பால்' எனப்படும் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதை ஆஷஸ் தொடரிலும் கடைபிடிப்போம் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.

    ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இங்கிலாந்து அணி குறித்து அவர் கூறுகையில் ''ஆஸ்திரேலியா சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு எதிராகவும் வெளிப்படும். இது மிகப்பெரிய சவால் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இது மிகப்பெரியது என்பது தெரியும்.

    பந்து வீசுவது, பேட்டிங் செய்வது மற்றும் பீல்டிங் செய்வது ஆகிய இந்த நோக்கத்தில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அது அழுத்தத்தை கொடுத்துவிடும்.

    நாங்கள் இதற்கு முன் எப்படி விளையாடினோமோ, அதே உத்வேகத்தில் விளையாட விரும்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும்'' என்றார்.

    • மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது.
    • சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இத்தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அந்தப் போட்டியில் இந்த 2 வீரர்களும் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.

    • பென் ஸ்டோக்ஸ்சுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 31-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல்.போட்டியில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பந்து வீச மாட்டார் என பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். அவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் பேட்டராக மட்டுமே பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வேன்.
    • மற்ற வீரர்களின் நிலை குறித்து இப்போதே கூற முடியாது.

    வெலிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்த சீசனில் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடஉள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்திருந்தது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த 3 நாட்களில் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் இங்கிலாந்து அணிக்காகவே விளையாடுவேன். அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்வேன். அதற்கு போதுமான நேரம் கொடுப்பதையும் உறுதி செய்துகொள்வேன்.

    மற்ற வீரர்களின் நிலை குறித்து இப்போதே கூற முடியாது. ஆனால் அவர்களிடம் பேசுவேன். ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு அவர்கள் தயாராக இருக்க விரும்புகிறார்களா என்பதை கேட்டறிவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஹாரி புரூக் உள்ளிட்டோரும் பல்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 3-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    • தற்போது பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
    • ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், நியூசிலாந்தின் ஸ்காட் குகெலிஜின் வீசிய இரண்டாவது இன்னிங்சின் 49-வது ஓவரில், ஸ்டோக்ஸ் மூன்றாவது பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்சருக்கு விளாசினார்.

    இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தின் நீண்டகால சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

    ஸ்டோக்ஸ் 33 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    90 டெஸ்ட் போட்டிகளில், ஸ்டோக்ஸ் 109 சிக்ஸர்கள் மற்றும் 36.00 சராசரியில் 12 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் மொத்தம் 5,652 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அவரது சிறந்த ஸ்கோர் 258 ஆகும்.

    மறுபுறம், மெக்கல்லம் 101 டெஸ்டில் 107 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவர் 38.64 சராசரியில் 6,453 ரன்கள் எடுத்தார். அவர் 12 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் நீண்ட வடிவத்தில் 302 ரன்களுடன் சிறந்த ஸ்கோரைப் பெற்றுள்ளார்.

    ×