search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியன் பத்திரிக்கை"

    • கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று பென் ஸ்டோக்ஸ் விமர்சித்தார்.
    • நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம் என்று பேட் கம்மின்ஸ் ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் வெளியேறியதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். சொல்லப்போனால் போட்டி முடிந்த பின் தங்களுடைய பெவிலியின் நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் எம்சிசி அமைப்பின் சில உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்தார். மேலும் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று பேட்ஸ்மேனை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ஓகே நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம். என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.

    இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிக்கை வெளிப்படையாக கலாய்த்துள்ளது. குறிப்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் டப்பாவை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கோப்பையை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கையை நிறுவனம் கலாய்த்துள்ளது.

    முன்னதாக 1890-களில் இங்கிலாந்து பத்திரிக்கை இவ்வாறு தங்களது அணியை பகிரங்கமாக விமர்சித்ததே ஆஷஸ் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என குறிப்பிடத்தக்கது. 

    ×