search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "basic facilities"

    • திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதியான சாலை வசதி, கழிவறை வசதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நீலப்புலிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா, தலைமை தாங்கினார்.

    நீலப் புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், துணை பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் காமராஜ், மாநில துணை தலைவர் ரமேஷ் அம்பேத், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருப்பனந்தாள் ஊராட்சி கிராமங்களில் அடிப்படை வசதியான சாலை வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.
    • சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

    இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    • அவனியாபுரத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அவனியாபுரம் 100-வது வார்டு ஜே.ஜே. நகர் பகுதியில் சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை செய்து தரக்கோரி பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் விரக்தியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார், மாநகராட்சி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கிராமத்திற்கு அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
    • பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஊட்டி.

    ஊட்டியில் கோடை சீசனையொட்டி நடைபெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.

    அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவைெயாட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.

    கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன்றான 'தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்' கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. பின்னர் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக திரளான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும் நேரில் வர முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.

    • ரெயில்களை பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
    • 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    உடுமலை :

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் உடுமலை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ரெயில் நிலையம் வாயிலாக ஆண்டுதோறும் ெரயில்வேக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.தற்போது உடுமலை ரெயில் நிலையத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் சிறப்பு ரெயில், கோவை - மதுரை உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் அனைத்து ெரயில்களையும் பயன்படுத்தும் உடுமலை பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அவ்வகையில் தெற்கு ரெயில்வே மதுரை ெரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ரெயில்வே நிலையங்களில் பெறப்பட்ட ஆண்டு வருவாய் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி 2022 - 23ம் ஆண்டில் உடுமலை ரெயில் நிலையம் வாயிலாக 4 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 465 ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.இந்த நிலையத்திற்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் ஓராண்டில் வந்து சென்றுள்ளனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்திலுள்ள 50 ெரயில்வே நிலையங்களில் வருவாய் அடிப்படையில் உடுமலைக்கு 23வது இடம் கிடைத்துள்ளது.கடந்த 2019-20ம் நிதியாண்டில் உடுமலை ரெயில் நிலைய வருவாய் 2.75 கோடியாக இருந்தது. வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றினால் பயணிகளும் பயன்பெறுவார்கள். ரெயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் அதிகரிக்கும்.குறிப்பாக ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம், ப்ளாட்பார்ம் மேற்கூரை, உணவக வசதி முக்கிய தேவையாக உள்ளது. மேலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கலாம். சென்னைக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்தல், விடுமுறை நாட்களில் சிறப்பு ெரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் உடுமலை ரெயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் உதவியாக இருக்கும்.வருவாயும் கூடுதலாகும். எனவே மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நீண்ட காலமாக வலியுறுத்தப்படும் ெரயில்களை இயக்க நடப்பாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
    • ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை

    அரியலூர்,

    அரியலூர் பேருந்து நிலையம் கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் கட்ட ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், இதன் பணிகள் முடிய 18 மாதங்கள் உத்தேசிருப்பதாலும், தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் - திருச்சி புறவழிச்சாலையில், வாணி திருமணமண்டபம் எதிர்புறம் உள்ள தனியார் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்காலிக பேருந்து நிலையம் என்றாலும் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து இங்கு செயல்பட உள்ளது. ஆனால் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இதுவரை புறக்காவல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர், மின்விளக்கு, ஏடிஎம் என்று அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் அரியலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், திருச்சி, தஞ்சை மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மாதாகோவில், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவேண்டும். சேலம், பெரம்பலூர், திட்டக்குடி பார்டர் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் மேம்பாலம், சத்திரம், அண்ணாசிலை வழியாக தற்காலிக பேருந்துநிலையம் செல்ல வேண்டும். தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் அரியலூர், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும். மேலும் ஆட்டோ வாடகை கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதோடு, தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் நகருக்குள் சென்று வர நகர பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர்.
    • ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாப்புலியூர் குப்பன்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் கடலூர் நகர செயலாளர் செந்தில் மற்றும் நகர அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயக்குமார், சித்திரவேல், ஒன்றிய துணை செயலாளர் வீரபாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
    • அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐவனூர், எழுத்தூர், மாங்குளம் கிராமங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். அப்பொழுது கிராம ங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். எழுத்தூர் கிராமத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதிகள், சிமெண்ட் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    உடனடியாக அதிகாரிகளை அழைத்து கழிவுநீர் வடிகால் வசதிகளையும் குடிநீர் வசதிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர் .மேலும் ஐயவனூர், மாங்குளம் கிராமத்தில் உள்ள கொவில்களை ஆய்வு செய்து கோவில்களை புனரமைப்பு செய்ய நிதி உதவிஅளித்து உடனடியாக கும்பாபிஷேகம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
    • இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் ஆகும். குடைவரை கோவிலான இங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    மலைமேல் காசி விசுவ நாதர் கோவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையானது இயற்கையிலேயே லிங்க வடிவில் அமைந்துள்ளதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.

    இங்கு பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மலையை சுற்றி சுமார் 3½ கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் மலையை சுற்றி கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் இருந்தாலும் அவை அனைத்திலும் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படு கின்றது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதே போல கோவில் வாசல் மற்றும் முக்கிய பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மலைக்கு பின்பகுதியில் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் பகுதிக்கு செல்ல சுமார் 500 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது.இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது.
    • குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்த சூழலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை.சேதம் அடைந்த இருக்கைகள், காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி, சுகாதார வளாக வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பஸ் நிலையம் உள்ளது.இங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை. இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    ஆண்களுக்காக கட்டப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்கள் கோரிக்கை வைக்கும் முன்பே நிறைவேற்றித் தர வேண்டியது அவர்களது கடமையாகும். ஆனால் குறைபாடுகள் கண்ணுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.

    உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றனர். 

    • கொடைக்கானல் மலைக்கிராம மக்கள் குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
    • எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் ஊராட்சி கடசிக்காடு. இங்கு 47 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 25 அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து தொகுப்பு வீடுகளும் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்கு தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை தகரம், தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது.

    மேலும் பலத்த காற்று வீசும் போது மேற்கூரையில் போடப்பட்டுள்ள தகரம் மற்றும் தார்ப்பாய் கிழிந்து விடுவதால், அதன் மேல் கருங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். சில வீடுகளுக்கு மேற்கூரை போடாமல் உள்ளது. இதனை கிராம மக்கள்தங்கள் சொந்த செலவில் சரி செய்து வருகின்றனர். மேலும் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி, கழிப்பறை வசதி போன்ற பல அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இங்கு கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இங்கிருந்து வரும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். குடிநீருக்காக அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இக் கிராமத்துக்கு தற்போது புதிய போர்வெல் போட்டு, மேல்நிலை தொட்டி கட்டி குடிதண்ணீர் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.எனவே இந்தப் பணியை விரைவில் முடித்து குடிதண்ணீர் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாச்சலூர் ஊராட்சி மன்ற செயலர் ரகு தெரிவித்தார்.

    • பூதலூர் அருகே உளள வளம்பகுடியில் 14-ந்தேதி நடக்க இருந்த சாலை மறியல் ரத்து செய்யப்பட்டது.
    • உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.

    பூதலூர்:

    பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 14ம்தேதி தஞ்சை-திருச்சி சாலை வளம்பகுடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகா அலுவலகத்தில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வருவாய் துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்,

    மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்லி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

    உசிலம்பட்டி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப்பள்ளியை பள்ளியை திறப்பது தொடர்பாக எதிர்வரும் 15.03.23 பதிலலிக்கப்படும்.

    துருசுப்பட்டி செல்லும் கட்டனை கால்வாய் சாலையை அமைத்துதருவது தொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு முன்மொழிவுகள் அனுப்பபட்டுள்ளது.

    நியாய விலை அங்காடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அமைத்துத்தரப்படும். தற்போது இயங்கி வரும் ஏ26 எண் கொண்ட பேருந்தை கிள்ளுக்கோட்டை வரை இயக்கிட வழி செய்யப்படும்.

    உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.உசிலம்பட்டி-துருசுப்பட்டி கிராமங்களுக்கு தற்போது நான்கு இணைப்பாக இருப்பதை ஒரு இணைப்பாக மாற்றி உசிலம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வர வழிவகை செய்யவழிசெய்யப்படும். வளம்பகுடியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    உசிலம்பட்டி கிராம பள்ளி மாணவர்கள் இழப்பீடு குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்ததை ஏற்று வரும் 14-ந்தேதி நடந்த இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

    ×