search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "atal bihari vajpayee"

    முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்ந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க அரசு 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு குடும்பத்தினர், பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    கார்கில் போர், அணுகுண்டு சோதனை என இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்க வைத்த வாஜ்பாய் எனும் தலைவர் என்றும் வரலாற்றில் இருப்பார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். பிரதமர் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர். 

    மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

    வாஜ்பாயின் அரசியல் பயணம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார். 23 நாட்கள் அப்போது சிறைவாசம் அனுபவித்தார்.



    பாஜகவின் தாய் இயக்கமான ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் சீடராக இணைந்த வாஜ்பாய் அரசியலில் கால் பதிக்க தொடங்கினர். 1957-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

    தனது பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட வாஜ்பாய், பின்னாளில் நாட்டின் பிரதமராக வருவார் என அப்போதைய பிரதமர் நேரு சிலாகித்து புகழ்ந்துள்ளார். எமர்ஜென்சியில் சிறை சென்ற வாஜ்பாய், எமர்ஜென்சிக்கு பின்னர் ஜனதா கூட்டணியாக பல தலைவர்களுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்து வென்று மொராஜி தேசாராய் மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியாக இடம் பிடித்தார்.

    ஜனதா கூட்டணி 1979-ல் கலைந்த பின்னர், அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் இணைந்து வாஜ்பாய் பா.ஜ.க.வை தொடங்கினார். கடின முயற்சி எடுத்து கட்சியை வளர்த்து காங்கிரசுக்கு நிகரான கட்சியாக அதனை மாற்றினார். 

    1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நாட்டின் பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

    1996-1998 காலகட்டத்தில் இரண்டு முறை ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் வீழ்ச்சியடைய, ஆட்சி கலைக்கப்பட்டது, மறுபடியும் தேர்தல் நடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 13 மாதங்கள் கழித்து, அ.தி.மு.க. தனது ஆதரவை திரும்ப பெற்றதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். 

    பின்னர் 1999 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த முறை தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.



    வாஜ்பாய் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள், கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியா-பாகிஸ்தான் பேருந்து சேவை என உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

    குறிப்பாக இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேற்றம் அடைந்தது.  தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஏற்றம் கண்டன. 

    அரசியல்வாதி மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் என பனமுகத் திறமை கொண்ட வாஜ்பாய், இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

    உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், பல ஆண்டுகளாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாஜகவை விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை செலுத்தும் வண்ணம் அவரது அரசியல் செயல்பாடுகள் இருந்தது. இந்த செயல்பாடுகள் மூலம் அவர் என்னென்றும் நினைவு கூறத்தக்க வகையில் இருப்பார்.
    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth
    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்,

    முன்னதாக நேற்று முதல் அவரது உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வாஜ்பாயின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தெரிவித்திருப்பதாவது,

    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth 

    கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளதால், அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமரும், அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவருமான வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.



    அவர் நலம் பெறுவதுதான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பதுதான் உண்மை. அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்நேரத்தில் நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth

    வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் பா.ஜ.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம்  தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்தனர்.

    இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளியிட்டு வருகின்றனர்.



    இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலும், வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த செயற்குழு கூட்டமும்  ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHealth
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவர்களிடம் நேரில் விசாரித்து சென்றுள்ளார். #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.

    நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாய்யின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 
    கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.

    இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி, மந்திரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். 
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #PMModi #Vajpayee
    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 11-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 92 வயதான வாஜ்பாயை பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 10-15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.


    இதற்கிடையே, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூப்பு தொடர்பான தேசிய மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே உள்ள சப்தர்ஜுங் மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை, அன்சாரி நகர் மற்றும் விபத்து முகாமிற்கு இடையே மோட்டார் சுரங்கப்பாதை வசதியை தொடங்கி வைத்தார்.  #PMModi #Vajpayee

    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். #AIIMS #AtalBihariVajpayee #ChandrababuNaidu
    புதுடெல்லி :

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தொடர் சிகிச்சை காரணமாக வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல் நிலை குறித்து அவரது உறவினர்களிடம் அவர் விசாரித்தார். #AIIMS #AtalBihariVajpayee #ChandrababuNaidu
    உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. #AtalBihariVajpayee
    புது டெல்லி :

    1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    வாஜ்பாயின் உடல்நிலை, நேற்று மதியம் மோசமடைந்தது. இதனால், அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர், முழுவதுமாக குணமடையும் வரை மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #AtalBihariVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


    வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாய்பாயின் குடும்பத்தினரிடம் சென்று நலம் விசாரித்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு வந்த மோடி, வாய்பாயிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்
    ×