search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "atal bihari vajpayee"

    உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் நகரில் நடைபெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். #AtalBihariVajpayee
    டேராடூன்:

    டெல்லியில் தகனம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்ட கலசங்கள் விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

    அவ்வகையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

    முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.


    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தை சென்றடையும். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

    தற்போது நடைபெற்றுவரும் அஸ்தி கலசம் யாத்திரையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். #Vajpayee #AsthiKalashYatra #AtalBihariVajpayee
    ஹரித்வாரில் தொடங்கி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.

    இந்நிலையில், டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து உரிய மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் வாஜ்பாயின் அஸ்தி கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    ஹரித்வார் நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் நகருக்கு கொண்டு செல்லப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அங்குள்ள சாந்தி கஞ்ச் ஆசிரமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.


    வாஜ்பாயின் ஈமச்சடங்குகளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.

    ஹரித்வாரில் கரைக்கப்படுவது போல் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளிலும் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கடவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமையகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்துகள் அளவில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை கூட்டங்களை பா.ஜ.கவினர் நடத்துகின்றனர்.

    நாளை டெல்லியில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு வாஜ்பாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி பிரார்த்தனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யாநாத் மற்றும் வாஜ்பாயின் உறவினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவரது அஸ்தி கோமதி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

    சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee #RIPVajpayee #Vajpayeeashes #Haridwar
    உத்தரபிரதேசத்தின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லியில் உள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் நேற்று இரவே டெல்லி கிருஷ்ண மேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

    கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர்மல்க வாஜ்பாய்க்கு பிரியாவிடை கொடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.



    இறுதி ஊர்வலம் தீன் தயாள் உபாத்யாய் மார்க், பகதூர் ஷா ஜபார் மார்க், டெல்லி கேட், நேதாஜி சுபாஷ் மார்க், சாந்தி வேன் வழியாக ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்ததும், வாஜ்பாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik
    பெங்களூர்:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.



    வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெங்களூர் மராத்தாஹள்ளியில் உள்ள வக்தேவி விலாஸ் கல்வி நிறுவன வளாகத்தில் வாஜ்பாயின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார்.  அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee  #SudarsanPattnaik #SudarsanSand
    தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    புதுடெல்லி:

    மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களிடமும் அன்பாக பழகியதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேறு கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த உதவிகளை வாஜ்பாய் ஒரு போதும் மறந்தது இல்லை.

    அவரது சுயசரிதை புத்தகமான “த அன்டோடு வாஜ்பாய்” என்ற புத்தகத்தில் அவர் தனக்கு உதவி செய்த மறக்க முடியாத தலைவர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்திக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.

    நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார். ராஜீவ்காந்தியை புகழ்ந்து அந்த புத்தகத்தில் வாஜ்பாய் கூறி இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. என்னை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக பாதிப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

    வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால்தான் அந்த சிறுநீரக பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    ஒருநாள் காலை பிரதமர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ராஜீவ்காந்தி பேசினார். அவர் என்னிடம் இந்தியா சார்பில் நியூயார்க் சென்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். என்னுடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் குழுவும் வர உள்ளது. நான் அந்த குழுவில் உங்களது பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

    நீங்கள் என்னுடன் நியூயார்க் வாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து உங்களது சிறுநீரக பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றார்.


    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழுவில் இடம் பெற்று நானும் சென்றேன். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதும் ராஜீவ்காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

    “நீங்கள் நன்றாக முழுமையாக குணம் அடைந்த பிறகுதான் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும். நல்ல முறையில் சிகிச்சை பெற்று வாருங்கள்” என்றார். அவர் உதவியால் நான் பெற்ற சிகிச்சைதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

    இவ்வாறு வாஜ்பாய் மறக்காமல் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்து எழுதி உள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவை தோற்றுவித்தவருமான  அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.



    இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாஜ்பாய்க்கு மலரஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee
    இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.
    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 



    வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, நானும், அமெரிக்க மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும், அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது. 

    இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 



    மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர். 

    நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 

    அவரது உடலுக்கு பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.

    பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளன. மேலும், நாளை ஒருநாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×