search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "antagonism"

    • பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது,அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார்.
    • இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். ,அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.

    பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.குளம் அருகே தூங்கினார்.  அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • அரிகிருஷ்ணன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்கிடையே நிலப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரிகிருஷ்ணன்.  சொக்கலிங்கம் மகன் வைத்தியநாதன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று இரவு அரிகிருஷ்ணன் குடிபோதையில் வைத்தியநாதன் வீட்டில் இல்லாதபோது அவரைப்பற்றி அசிங்கமாக திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட வைத்தியநாதன் மனைவி மற்றும் மகளை பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தினார்.   

    இதில் வைத்தியநாதன் மனைவி சண்முகவள்ளிக்கு முதுகு, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் பாட்டில் குத்து விழுந்தது. வைத்தியநாதன் மகள் சண்முகப்பிரியாவின் முதுகில் சரமாரியாக பாட்டிலால் குத்தினார்.

    படுகாயம் அடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னகாரன்குப்பம் அரிகிருஷ்ணனை (36) கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
    • காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது34) விவசாயி.

    அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (26).

    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று புதுக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்கு இளையராஜா, ராஜா ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

    அப்போது திருமண மண்டபத்தின் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ராஜா ஆத்திரம் அடைந்து இளையராஜாவை கீழே தள்ளி விட்டு கத்தியால் குத்தி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். 

    • மறுநாள் மாலை காயங்களுடன் அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் உல. பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி வளர்மதி.கடந்த 14-ந்தேதி பாலசுப்பிரமணியன் தனது காரில் வழக்கம் போல் பணிக்கு சென்றார். மாலை அவர் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15-ந் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.

    தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17-ந் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.

    பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

    புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பர் பார்த்தி (24) என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தோஷ் மற்றும் பார்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:  

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி. இவரது கணவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.பிரமுகர். இவர்களுக்குள் அதே பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இதன் காரணமாக இருத்தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது . இது தொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் மதியழகன் தனது வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியதால் மதியழகன் கதவை திறந்தார். இதில் ஒரு நபர் திடீரென்று முகத்தில் துணி கொண்டு மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் கதறி துடித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மதியழகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணவர் புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 67), விஷ்ணு மூர்த்தி (வயது 57), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), அன்பழகன் (வயது 43), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதுச்சேரி ரவுடிகள் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலத்தகராறில் முன்விரோதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    கலவை அடுத்த கன்னிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவருக்கும் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணா துரை (55). என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அவருக் கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த அண்ணா துரையை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வாழை ப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மா ம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது தெரிய வந்தது. இது தவிர செந்தில்குமாருக்கு நண்பர்கள் சிலருடனும் முன்விரோதம் உள்ளது.

    எனவே அவரை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை யார் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    ×