search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amount"

    • விவசாயிகள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண கோரி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு ஆலை சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

    அதுவரை ஆலையை இயக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது பலர் கருப்பு துண்டு அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தெலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
    • ஆபரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சைவ. குமணன், மாவட்ட செயலாளர் முருகு .இளஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொது மக்களுக்கு வழங்கிய பின்னர் தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரைய தொகை என்று கூறி பெருந்தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும் . நிலுவைத் தொகை என்ற பெயரில் ஆப்பரேட்டர்கள் மீது சுமத்தியுள்ள நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

    வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு , பூதலூர், பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும்.
    • கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி 10 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

    • அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டம்.
    • பொருட்கள் மற்றும் செலவின தொகையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும்.

    சீர்காழி:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி மானியம் அனுப்பப ட்டுள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 94 பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கபட்டுள்ளது.

    இந்த மானிய தொகையை பள்ளியின் வளர்ச்சிக்கு செலவு செய்தல் சார்ந்த கூட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்க்கு ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை யேற்று பேசும் பொழுது,

    இந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கினை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் இணைந்து பராமரிக்கபடவேண்டும்.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான பொருட்கள் வாங்க முன்கூட்டியே திட்டமிட பட்டு பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தரமான பொருட்களை வழங்க வேண்டும்.

    'வழங்கப்பட்டுள்ள மொத்த தொகையில் 10 சதவீதத்தை கழிவறை சுத்தம் செய்யவும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் பயன்படு த்தி கொள்ளலாம். பள்ளி மானியத்தில் வாங்க ப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் செலவின தொ கையை எமிஸில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இப்பயிற்சியின்கருத்தா ளர்களாக மாவட்ட தணிக்கையாளர் மோகன், வட்டார தணிக்கையாளர்கள் ராஜீவ்காந்தி சிவனேசன் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் கவிதா நன்றி கூறினார்.

    • பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை தஞ்சாவூர் இணைந்து அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் பல்கலக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    இவ்விழாவில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் பேசுகையில், மக்கள் அனைவரும் பசியில்லாமல் வாழவேண்டுமென்றால் பெண்கள் தங்களுடைய அலங்கார செலவின ங்களுக்காக செலவிடும் தொகையை குறைத்தும் ஆண்கள் தீயப்பழக்க வழக்கத்திற்காக செலவிடும் தொகையைத் தவிர்த்தும் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வ ரவேண்டும் என்றார்.

    இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவே ந்தருக்கு வள்ளலார் விருது வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையம் இயக்குனர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.

    கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா. தம்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வாசுதேவன் இவ்விழாவிற்கு இணைப்புரை வழங்கினார்.

    இதில் டாக்டர் சிவராமன், அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அபராதம்

    அதன்படி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், விதிமுறைகள் மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா

    மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர். இதில் போக்குவரத்து விதி மீறும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதி மீறியதாக 40 ஆயிரம் வழக்குககள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    2800 வழக்குகள் பதிவு

    மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கால கட்டத்தில் போதையில் வாகனம் ஓட்டிய 2800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்க–ளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டாதவர்களுடைய லைசென்ஸ்-ஐ தற்காலி–மாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிந்துரை செய்கிறோம்.

    இதனை பரிசீலித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போதையில் வாகனம் ஓட்டியவர்களின் லைசென்சை ரத்து செய்து வருகின்றனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்க ஆலோசனை கூட்டம் தாராசுரத்தில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் தி.மு.க. சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில்:-

    மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்தி ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளி டமிருந்து பல்வேறு உபகரண ங்களை, சலுகைகளை, உரிமைகளை தொடர்ந்து போராடி பெற்று தருகிறோம் என்றார்.

    கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்தி றனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ. 3,000-மும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000-மும் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் வேலை வழங்க வேண்டும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற உள்ள 4-வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினார்.

    அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கூறியதாவது:-

    திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உலக நலத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நடவு எந்திரம் டிராக்டர் ரூ. 13,01,532 லட்சம் மதிப்பீட்டிலும் , சமூக நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10,00,000 லட்சம் மதிப்பில் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், கிரி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் லதா, தாசில்தார்கள் சந்தனவேல், பிரபாகரன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
    • தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் மாநில உளவுத்துறை தோல்வியையே காட்டுகிறது. இதனால் உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    பெரியார் கல்லூரியில் வினாத் தாளில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×