search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol Addiction"

    • பாதுகாப்பு போலீசார் அவரை வெளியேற்றினர்
    • மது போதையில் மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மது போதையில் ஒருவர் தனது தெரிந்த நபருடன் மனு கொடுக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கையில் வைத்திருந்த மனுவில், ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையின் போது அன்னதானம் வழங்கவும், பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று மல்லுக்கட்டி அந்த போதை நபரை பிடித்து கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.




    • பாண்டித்துரையும்,கருப்பசாமியும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
    • ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா.

    மதுபோதை தகராறு

    இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் தங்களது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றனர்.

    தம்பி அடித்து கொலை

    அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர் பாண்டித்துரை அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாண்டித்துரையை தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே பதுங்கி இருந்த பாண்டித்துரையை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
    • கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது‌. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

    ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
    • பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்
    • பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடிய அன்பழகன் மாலையில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர்களுடன் சேர்ந்து மது அருந்திய அன்பழகனுக்கு போதை தலைக்கேறியது. இருந்தபோதிலும் நண்பர்களிடம் கூறிவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் தடுமாறியவாறு வீட்டுக்கு புறப்பட்டார். ஒருகட்டத்தில் பாதையே தெரியாத அளவுக்கு வாகனம் ஓட்டிய அன்பழகன், சிறுகனூர்-தச்சங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    மணல் நிறைந்த அந்த சாலையில் சில மீட்டர் தூரம் சென்ற அவர் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    ஆனால் அந்த வழியாக யாரும் வராததால் உதவி கிடைக்காமல் நீண்ட நேரமாக போராடிய அன்பழகன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் அன்பழகனை தேடி அலைந்தனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தது அன்பழகன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அன்பழகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . நேற்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இறந்து போனவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.

    • இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.
    • பலத்த காயமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் (வயது 50) என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.இதனை மருத்துவமனை கம்பவுண்டர் சதாசிவம்(40) தட்டி கேட்டார்.

    இதில் அப்துல்ரகுமான் ஆத்திரமடைந்து பாட்டிலால் சதாசிவத்கொதை குத்தி னார். மேலும் தன்னை தானே குத்தி கொண்டார். இதில் பலத்த காயமமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சேசை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தலைமை ஆசிரியர் கீழே புரண்டு கிடந்த சம்பவம் மாணவ, மாணவிகளை அதிர்ச்சியடைய செய்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமைஆசிரியர் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு போதையில் வளாகத்திலேயே படுத்து புரள்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அதனை உறுதிப்படும் வகையில் அவர் மதுபோதையில் புரண்டு கிடக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பள்ளி வகுப்பறையில் மது அருந்தி விட்டு மாணவ, மாணவிகள் அமரும் மேஜையில் காலி பாட்டிலை வைத்தபடி தலைமை ஆசிரியர் போதையில் புரண்டு கிடக்கிறார்.

    இதையறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டுள்ளனர். இதையடுத்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு இன்று காலை தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், நேற்று மாலை வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்களை வைத்து சுவர் கரும்பலகைக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தவுடன் தலைமை ஆசிரியர் மது அருந்தியது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியில் நடவடிக்கை பாய்கிறது. #tamilnews
    ×