search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Government School"

    திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் குடிபோதையில் தலைமை ஆசிரியர் கீழே புரண்டு கிடந்த சம்பவம் மாணவ, மாணவிகளை அதிர்ச்சியடைய செய்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் படிக்கின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமைஆசிரியர் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு போதையில் வளாகத்திலேயே படுத்து புரள்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அதனை உறுதிப்படும் வகையில் அவர் மதுபோதையில் புரண்டு கிடக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பள்ளி வகுப்பறையில் மது அருந்தி விட்டு மாணவ, மாணவிகள் அமரும் மேஜையில் காலி பாட்டிலை வைத்தபடி தலைமை ஆசிரியர் போதையில் புரண்டு கிடக்கிறார்.

    இதையறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டுள்ளனர். இதையடுத்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு இன்று காலை தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், நேற்று மாலை வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்களை வைத்து சுவர் கரும்பலகைக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தவுடன் தலைமை ஆசிரியர் மது அருந்தியது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியில் நடவடிக்கை பாய்கிறது. #tamilnews
    ×