

நீடாமங்கலம்:
நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் (வயது 50) என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.இதனை மருத்துவமனை கம்பவுண்டர் சதாசிவம்(40) தட்டி கேட்டார்.
இதில் அப்துல்ரகுமான் ஆத்திரமடைந்து பாட்டிலால் சதாசிவத்கொதை குத்தி னார். மேலும் தன்னை தானே குத்தி கொண்டார். இதில் பலத்த காயமமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சேசை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.