search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agriculture"

    • பண்ணை கருவிகள் ஜிப்சம், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • சம்பா பயிர் காப்பீடு செய்ய வருகிய 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள பூவாணம் மற்றும் அழகியநாயகிபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு பருவ பயிற்சி நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தலைமை வகித்து பேசியதாவது, கிராம முன்னேற்றத்திற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து குழுவாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்.

    வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 39 நெல் ரகம் விசைத்தெளிப்பான்கள் 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது எனவும், பண்ணை கருவிகள் ஜிப்சம், சிங்க் சல்பேட், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திடவும் கேட்டுக்கொண்டார்.

    நடப்பு நெல்-சம்பா பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடன் பயிர் காப்பீடு செய்திட அறிவுறுத்தினார்.

    கலைஞர் திட்டத்தின் மூலம் தொழு உரத்தினை ஊட்டமேற்றி பயன்படுத்திட திரவ துத்தநாக உயிர் உரம் ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் அளவில் 100 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பூவாணம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.தேவதாஸ், அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    முடிவில் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று வேளாண்மை செய்தார்.
    • போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதாக கூறினார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்க ன்பாளையம் அருகே உள்ள பாலமலை பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பழ ங்குடியின குடும்பங்கள் உள்ளன. அவர்கள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பால மலை அடுத்த பசுமணிபுதூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரம ணியம் (வயது 55) என்ப வருக்கு சிறந்த விவசாயி விருது வழங்கப்பட்டு உள்ளது. இது பாலமலை பகுதியில் வசிக்கும் கிராம த்தினர் மத்தியில் பெருமிதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுப்பிர மணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    நாங்கள் பாலமலை பகுதியில் தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். அங்கு பருவமழையை மட்டும் நம்பியே விவசாயம் நடக்கிறது. மேலும் எங்க ளின் 4 ஏக்கர் பரப்பளவில் சக உறவினர்கள் உதவி யுடன் ராகி, கம்பு, சோளம் உட்பட வானம் பார்த்த பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம்.

    சில சமயங்களில் நாங்களே குடத்தில் தண்ணீர் முகர்ந்து சென்று பயிர்களுக்கு விட்டு வேளாண்மை செய்து வருகிறோம். இயற்கை முறையில் விளைவதால் பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வந்த வேளாண்து றையினர் எங்களின் விவ சாய நேர்த்தி பற்றி அறிந்து மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி என்னை சென்னைக்கு அழைத்து கவுரவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது எங்களை போன்ற பழங்கு டியின மக்களை ஊக்குவி ப்பதாக அமைந்து உள்ளது.

    மேலும் தற்போது காப்பி விளைச்சல் செய்வதற்காக தனியார் அமைப்பினர் சோதனை அடிப்படையில் எங்களுக்கு விதைகளை கொடுத்து உள்ளனர். பாலமலை பகுதியில் வசி க்கும் பழங்குடியின மக்க ளுக்கு விவசாய நிலத்தில் போர்வெல் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அதிக விளைச்சலை உருவாக்கி, எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சிறந்த விவசாயி விருது பெற்ற சுப்பிரமணிய த்துக்கு, பாலமலை அரங்க நாதர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கார்னரில் செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடு களினால்ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) பயிருக்கு15.11.2023 மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு 31.10.2023-ம் தேதி வரையிலும்,உளுந்து பயிருக்கு 15.11.2023 வரையும், மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.02.2024, கத்தரி மற்றும்வெங்காயம் பயிருக்கு 31.01.2024 தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடுசெய்து கொள்ளலாம்.

    மேலும், காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487- ம்,மக்கா ச்சோளத்திற்கு ரூ.296-ம், பருத்தி ரூ.484-ம், உளுந்து பயிருக்கு ரூ.207-ம், மணிலாபயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்குரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மைய ங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்தேசிய காப்பீட்டு இணைய தளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில்செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவை யானஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல்(பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம்மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும்விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவிவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கள்ளக் குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இணைந்து பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளை ஆய்வு செய்தார்.
    • மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்

    காங்கயம்:

    காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் ஆய்வு செய்தாா்.

    இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளையும், மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வின்போது, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சதீஷ்குமாா், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • பாரம்பரிய நெல் விதைகள் ஒரு கிலோ ரூ.25-க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.25-க்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த விதை அளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • புதுக்கோட்டையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது
    • வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு நெல் நுண்சத்து, சூடோமோனாஸ், திரவ அசோபைரில்லம், திரவ பாக்டீரியா முதலிய உயிர் உரங்கள், வரப்பு பயிராக சாகுபடி செய்திட உளுந்து, விதைகள் முதலிய இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி, வழங்கினார். மேலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை களஆய்வுகள் செய்து அதிகபட்ச மகசூல் எடுத்திட தொழில் நுட்பஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.இது குறித்து அவர் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் பருவ மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி வட்டாரத்தில் 6623 ஹெக்டரும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 5313 ஹெக்டரிலும், நேரடி நெல்விதைப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஹெக்டருக்கு ரூ.7500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 24 ஹெக்ட ரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், அரிமளம் வட்டாரத்தில் 8 ஹெக்டரி லும், மொத்தம் புது க்கோட்டை மாவட்டத்தில் 80 ஹெக்டரில் உயர் தொழில்நுட்ப வழிமுறை களை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல்பெற விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங் கள்அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

    வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்)மா.ஆதிசாமி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் திட்ட ஆலோசகர்என்.சர்புதீன், தொழில் நுட்ப உதவியாளர், கார்த்திக், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சவிதா, அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பத்மப்ரியா, மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவிவேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
    • இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதுக்கோட்டை பகுதி நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை துணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.குலைநோய் தாக்கப்பட்டால், . இலை களின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப்பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டி ருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.

    வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு,நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும்.அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயம் கடும் பாதிப்பால் மழை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
    • மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. வழக்கம் போல பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். அவ்வப்போது பெயரளவில் சாரல் மழை பெய்வதாலும் வெப்ப சலனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும் எந்த அளவு இருக்குமோ? என்ற கலக்கத் தில் விவசாயிகள் விவசாய பணிகளில் இன்னும் முழு மூச்சாக இறங்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வயல்களில் விதைகளை பாவி, அவை நாற்றுக்களாக வளர்ந்து உள்ளது. அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடி யாமல் அப்படியே விடவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லா மல் குளம், ஊரணி மற்றும் வீடுகளில் உள்ள கிணறு களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்ணாமூச்சி காட்டும் மழையால் கலக்கத் தில் விவசாயிகள் உள்ளனர்.

    இதை தொடர்ந்து மழை வேண்டி கோவில், பள்ளி வாசல், தர்கா, தேவால யங்களில் சிறப்பு பிரார்த் தனை, தொழுகை நடந்து வருகிறது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரு கின்றனர்.

    இன்னும் சில நாட்களில் மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    • வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் கணினி திறனுடன் இருத்தல் அவசியம்.

    திருப்பூர்:

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    தகுதிகளானது வேளாண்மை , தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் முடித்திருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அல்லது வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

    தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்.

    2023-24 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லதுவேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி,வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை, வங்கி கடன்ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

    தங்களின் விரிவான திட்டஅறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம்.
    • இதுவரை 37 லட்சத்து 83 ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தில் சுமார் 5ஏக்கர் பரப்பளவில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    மரம் தங்கசாமி நினைவுதினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.

    அதன்படி அத்தியூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37லட்சத்து 83ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருவதாக அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.
    • கூட்டத்தில் உழவன் செயலி குறித்து எடுத்து கூறப்பட்டது.

    அம்பை:

    நெல்லை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முக்கிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்னும் தலைப்பில் அம்பையில் நடத்தப்பட்டது.

    6 நாட்கள் பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் தொழில் நுட்பத்தில் வல்லுநராக்கி, தொழில் முனைவோராக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.

    2-ம் நாளாக நடத்தப்பட்ட பயிற்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவன இயக்குநர் சங்கர லிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

    உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வர வேற்று பேசினார். இயக்குநர் அவர்தம் உரையில் இப்பயிற்சியில் பயிற்சி பெற்றவர்கள் தாம் பெற்ற பயிற்சியின் நன்மையினை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டு மெனவும், வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.

    ரசாயன மருந்துகள் மற்றும் உரங்கள் பரிந்துரைக் கப்பட்ட அளவிற்கு அதிகம் இடுவதால் ஏற்படும் தீமைகளையும், சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு களை குறித்தும் எடுத்துரைத்தார்.

    மேலும் வேளாண் துறையில் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப் பட்டுள்ள உழவன் செயலி குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணைப் பேராசிரியர் ஆல்வின், பூச்சி மேலாண்மையில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணி களின் பங்கு மற்றும் கவர்ச்சி பொறிகள் பயன் படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக் கான ஏற்பாடுகளை அட்மா பணியாளர்கள் ஈழவேணி, சதீஷ் , தங்கராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×