என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
- புதுக்கோட்டையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது
- வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்
புதுக்கோட்டை,
அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு நெல் நுண்சத்து, சூடோமோனாஸ், திரவ அசோபைரில்லம், திரவ பாக்டீரியா முதலிய உயிர் உரங்கள், வரப்பு பயிராக சாகுபடி செய்திட உளுந்து, விதைகள் முதலிய இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி, வழங்கினார். மேலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை களஆய்வுகள் செய்து அதிகபட்ச மகசூல் எடுத்திட தொழில் நுட்பஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.இது குறித்து அவர் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் பருவ மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி வட்டாரத்தில் 6623 ஹெக்டரும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 5313 ஹெக்டரிலும், நேரடி நெல்விதைப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டருக்கு ரூ.7500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 24 ஹெக்ட ரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், அரிமளம் வட்டாரத்தில் 8 ஹெக்டரி லும், மொத்தம் புது க்கோட்டை மாவட்டத்தில் 80 ஹெக்டரில் உயர் தொழில்நுட்ப வழிமுறை களை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல்பெற விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங் கள்அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்)மா.ஆதிசாமி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் திட்ட ஆலோசகர்என்.சர்புதீன், தொழில் நுட்ப உதவியாளர், கார்த்திக், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சவிதா, அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பத்மப்ரியா, மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவிவேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்