search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய பணி"

    • விவசாயம் கடும் பாதிப்பால் மழை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
    • மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. வழக்கம் போல பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். அவ்வப்போது பெயரளவில் சாரல் மழை பெய்வதாலும் வெப்ப சலனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும் எந்த அளவு இருக்குமோ? என்ற கலக்கத் தில் விவசாயிகள் விவசாய பணிகளில் இன்னும் முழு மூச்சாக இறங்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வயல்களில் விதைகளை பாவி, அவை நாற்றுக்களாக வளர்ந்து உள்ளது. அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடி யாமல் அப்படியே விடவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லா மல் குளம், ஊரணி மற்றும் வீடுகளில் உள்ள கிணறு களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்ணாமூச்சி காட்டும் மழையால் கலக்கத் தில் விவசாயிகள் உள்ளனர்.

    இதை தொடர்ந்து மழை வேண்டி கோவில், பள்ளி வாசல், தர்கா, தேவால யங்களில் சிறப்பு பிரார்த் தனை, தொழுகை நடந்து வருகிறது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரு கின்றனர்.

    இன்னும் சில நாட்களில் மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விவசா யத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடு நீடித்து வந்தது.

    இதனை கவனத்தில் கொண்டு தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு உரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொச்சி யில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கன்னியா குமரி மாவட்ட விவசாய பணிகளுக்காக 635 டன் பாக்டம்பாஸ் உரம் இன்று நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தது. அந்த உரம் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மத்திய உர நிறுவன கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. தனியார் ஏஜென்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த உரம் இங்கிருந்து விநியோகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×