search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adultery"

    சென்னை சாலிகிராமத்தில் சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    சாலிகிராமம் வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா நிறுவனம் என்கிற பெயரில் சிலர் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக தியாகராயநகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் நடேசன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது. சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா பெருமாள், நாமக்கலைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலு, மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது விசாரணையில் தெரிந்தது.

    சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சினிமா கம்பெனி நடத்துவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெருமாள், பாலாஜி, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    உல்லாசத்துக்கு வரமறுத்த பெண்ணை சர மாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுமித்ரா (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் பாபு (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் சுரேஷ் பாபு நேற்று மதியம் சுமித்ராவிடம் எங்களது வீட்டில் யாரும் இல்லை நீ எனது வீட்டுக்குவா நாம் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்தார். ஆனால் சுமித் ரா வர மறுத்துவிட்டார்.

    இதனால் சுரேஷ்பாபு ஆத்திரமடைந்து சுமித்ரா வின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை சர மாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் சுமித்ரா புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குபதிவு செய்து சுரேஷ் பாபுவை கைது செய்தார்.
    குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து கள்ளக்காதலியிடம் சேர்க்க முயன்றதால் தற்கொலை முடிவை எடுத்ததாக தற்கொலைக்கு முன் புஷ்பலதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #AdulteryVerdict #Section497
    சென்னை:

    புஷ்பலதா, தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

    கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும் போது எங்களது 1½ வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார். மாலையில் வீடு திரும்பும் போது அழைத்து வருகிறார்.

    இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

    குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என்சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்துக்கு பின்னர் கணவர் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.


    இதற்கிடையே புஷ்பலதாவின் பெற்றோர் செல்வம்- சரசம்மாள் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், மகளின் கணவர் ஜான்பால் பிராங்கிளினுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் 4 ஆண்டுக்கு முன்பே பழக்கம் இருந்தது. இதனை மறைத்து எனது மகளை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து உள்ளார். பலமுறை எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.

    என் மகளின் சாவுக்கு கணவர் ஜான்பால் பிராங்கிளினே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #AdulteryVerdict #Section497 

    சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கள்ளத்தொடர்பை கணவன் நியாயப்படுத்தியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdulteryVerdict #ExtramaritalAffair
    சென்னை:

    அட, பாவி மனுஷா... உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..!

    எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாதிரி ஒரு பெண் தானே!

    ஏன் கத்துறே? ஊரு உலகத்துல நடக்காத தப்பையா செய்து விட்டேன்? போ... போய் வேலையை பார்...!

    ஆமய்யா... ஏன் சொல்ல மாட்டே? நீயே கதின்னு உல் காலடியில் கிடக்கிறேன் பார்! நீ இதுவும் செய்வே! இதுக்கு மேலேயும் செய்வே! உன்னை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டாய்! போலீசுல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டினால் அவ வீட்டுக்கு போக மாட்டாய்...! இப்ப பாரு!

    அடியேய்.... எங்க... போலீசுக்கா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட ஒண்ணும் செய்ய முடியாதுடி! உள்ளதை சாப்பிட்டு கிட்டு ஒழுங்கா இரு....!

    - இது கற்பனையில் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜமாகவே சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் நடந்தது.

    ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).

    இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

    நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.

    கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.

    அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

    மனக்குமுறல் எப்படியாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும். நேற்று முன்தினம் மதியமே பிராங்கிளினுக்கு பணி முடிந்து விட்டது. ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.

    கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்தான் மேலே குறிப்பிட்டு இருப்பது.

    வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

    அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?

    கணவரிடமும் நியாயம் கிடைக்காது. கோர்ட்டுக்கு போனால் கூட நீதி கிடைக்காது என்றதும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார்.

    வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் நடந்த விபரங்களை பிராங்கிளின் தெரிவித்து இருக்கிறார்.


    தகாத உறவும் சரிதான் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முதல் பலியாகி இருக்கிறார் புஷ்பலதா.

    சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?

    பிராங்கிளினும் விரும்பினார். கள்ளக்காதலியும் விரும்பினார். இருவரது சம்மதத்துடன் தகாத உறவும் நல்ல உறவாகி விட்டது.

    அதற்காக புஷ்பலதாவும் ‘நீயும், நானும்’ என்பதுதான் நமது சட்டம். நீ ஒருத்தியை தேடிச் சென்றிருக்கிறாய். நானும் ஒருவனை தேடிக் கொள்கிறேன் என்று செல்வாரா? அவர் இந்த மண்ணின் கலாச்சாரத்தின் நடமாடும் அடையாளம் அல்லவா? தனக்கொரு கேடு என்றால் தன்னைத்தான் அழித்துக் கொள்வாள். அதைத்தான் செய்து இருக்கிறார்.

    சரி, இனி புஷ்பலதாவின் சாவுக்கு காரணமாகி விட்டார் என்ற சட்டப்பிரிவின் மூலம் பிராங்கிளின் தண்டனைக்கு உள்ளாகலாம்.

    எந்த தவறும் செய்யாத அவர்களது குழந்தையும் தண்டிக்கப்பட்டுள்ளதே! அதற்கு யார் பதில் சொல்வது?

    யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகி விடலாம். பாண்டிய மன்னன் எடுத்த தவறான முடிவு மதுரையின் அழிவுக்கு வழி வகுத்ததல்லவா! #AdulteryVerdict #ExtramaritalAffair
    கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது குற்றமில்லை என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #adultery

    வாணியம்பாடி:

    கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் திடீரென கூச்சலிட்டார்.

    அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #adultery 

    ×