search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accused"

    மும்பையில் கடந்த 1993-ம் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் சோட்டா ஷகீலின் சகோதரர் அன்வர் பாபு ஷேக்-கை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். #Dubaipolice #ChhotaShakeel #1993Mumbaiblast #AnwarBabuSheikh
    மும்பை:

    மும்பையில் கடந்த 12-3-1993 அன்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். சுமார் 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு காரணமான தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர் அன்வர் பாபு ஷேக் உள்ளிட்டோரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதவிர, மும்பை மற்றும் தானே பகுதிகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் போலீசாரின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அன்வர் பாபு ஷேக் இருந்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை பாதுகாப்பு வழங்குவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்டுடன் அபுதாபி விமான நிலையத்தில் அன்வர் பாபு ஷேக்கை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் மும்பை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே வேளையில், பாகிஸ்தானிலும் இவர்மீது சில வழக்குகள் இருப்பதால் அன்வர் பாபு ஷேக் யாரிடம் ஒப்படைக்கப்படுவார்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. #Dubaipolice #ChhotaShakeel #1993Mumbaiblast #AnwarBabuSheikh
    மருந்து கம்பெனி நடத்தி ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்த குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் துபாயில் கைது செய்யப்பட்டார். #GujaratPharma #BankFraud
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார்.

    இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். #GujaratPharma #BankFraud #tamilnews 
    கதுவா கற்பழிப்பு வழக்கில் ஜம்மு காஷ்மீர் சிறையில் உள்ள குற்றவாளிகளை குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #KathuaCase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்னு என்பவரை போலீசார் துன்புறுத்துவதாக பதன்கோட் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக பதிலளித்த டி.ஜி.பி இந்த குற்றச்சாட்டில் உண்மை ஏதும் இல்லை என பதிலளித்தார்.

    இதேபோல், சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இந்த மனு பொய்யானது என தங்களது பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, சிறையில் இருக்கும் மன்னுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, கதுவா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பஞ்சாப்பில் உள்ள குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    மேலும், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால், பஞ்சாப் அல்லது அரியானா மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கை மாற்றிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வக்கீல் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோர்கள் அவர்களை சந்திக்க விரும்பினால் காஷ்மீர் மாநில அரசின் செலவில் அவர்களை பார்க்க அனுமதிக்குமாறும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. #KathuaCase
    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி அகமது லம்பு 25 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். #BombayBlast #AhmedLambu
    ஆமதாபாத்:

    மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், உலகையே உலுக்கின. 257 பேரை பலி கொண்டு, 700-க்கும் மேற்பட்டோரை காயப்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அகமது லம்பு என அறியப்படுகிற அகமது ஷேக் (வயது 52) என்பவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஆனால் அவர் தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாட்டில் இருந்து தப்பி விட்டார். அதன்பின்னர் அவர் போலீஸ் பிடியில் சிக்கவே இல்லை. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ (சர்வதேச தேடல் அறிவிக்கை) பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவரது தலைக்கு ரூ.5 லட்சம் விலையும் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவர் குஜராத்தின் தென்பகுதியில் வல்சாட் கடற்கரை பகுதியில் பதுங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று, அகமது ஷேக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ள அவர், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படுவார் என குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    அகமது லம்பு, மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.  #BombayBlast #AhmedLambu #tamilnews 
    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரான சசி தரூர் எம்.பி.க்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ், சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
    ×