search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young voters"

    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    • இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெரம்பலூர்

    வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காள ர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவி த்ததாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிட ப்பட்டுள்ள வரை வு வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி களில் மொத்தம் 2,94,314 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,43,585 ஆண் வாக்கா ளர்களும், 1,50,721 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகு தியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,68,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,32,906 ஆண் வாக்காளர்களும், 1,35,279 பெண் வாக்காள ர்களும், உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி,2024 ஜன 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வா க்காளர் பட்டியலில் சேர்த்தி டவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போ ன்றவற்றிற்கான விண்ண ப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்கு ச்சாவடி நிலை அலு வலர்களிடம் அளிக்கலாம்.

    17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது பெயரை வாக்கா ளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதிய வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள மாணவ மாணவி கள் அனைவருக்கும் படிவம் 6 வழங்கப்பட்டது. இணைய தளம் வாயிலாகவும் வாக்கா ளர் பதிவு நடைபெற்றது. இந்த படிவங்களை பிழையி ன்றி சிறப்பாக பூர்த்தி செய்த முதல் 10 மாணவ மாணவி களுக்கு தலா ரூ.500 வீதம் பரிசுத்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தி ய பாலகங்காதரன், ராமகி ருஷ்ணா கல்வி நிறுவ னங்களின் தலைவர் சிவ சுப்ரமணியன், செயலாளர் விவே கானந்தன், பெரம்ப லூர் தாசில்தார் சரவண ன், தேர்தல் பிரிவு வட்டாட்சி யர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 946 பேர் ஆகும். இவர்களது வாக்குகள் சில தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்க கூடிய வகையில் இருக்கும். #Parliamentelection
    சென்னை:

    தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 91 லட் சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர்.

    ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6 கோடி வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் இளம்வாக்காளர்கள் ஆவார்கள். 18-19 வயதுகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 பேர் இருக்கிறார்கள்.

    இவர்கள் இந்த தேர்தலில் முதன் முதலில் வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வாக்குகள் சில தொகுதிகளில் வெற்றி- தோல்விகளை நிர்ணயிக்க கூடிய வகையில் இருக்கும்.



    வாக்காளர்களில் 1 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 274 பேர் 20 முதல் 29 வயது உடையவர்கள் ஆவார்கள். அதுபோல 1 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரத்து 913 பேர் 30 முதல் 35 வயது உடையவர்கள்.

    மொத்தத்தில் தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 946 பேர் ஆகும். இவர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் அதிக இடங்களில் வெற்றிகளை குவிக்க இயலும்.

    40 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே இளைஞர்களை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் என்று கருதப்படுகிறது. #Parliamentelection

    ×