search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle testing"

    • மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
    • 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப் பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் பஸ்களில் ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டிவனம் நகரில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளை ச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், திண்டிவனம் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர், போக்குவரத்து கழக உதவி பொறியாளர்நேற்று திண்டிவனம் பஸ் நிலையம் ,திண்டிவனம்- மரக்காணம் சாலை மற்றும் செஞ்சி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினா்.

    இதில் 5தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்ப கூடிய ஏர் ஹாரன்கள், கண்கள் கூசும் அளவுக்குஅதிக ஒளியுடன் திகைப்பூட்டும் விளக்குகள் பொருத்தப் பட்ட 5பஸ்களுக்கு தலா ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டது. 16 வாகனங்களை சோதனை செய்து அறிவிக்கை செய்யப்பட்டது.அதிக பாரம் ஏற்றிவந்த சரக்கு வாகனத்ைத நிறுத்தி சோதனை செய்தனர்.ஒரு வாகனத்திற்கு ரூ5 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது.

    • திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
    • விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள், ஆகியவை விற்பதாக வெளியான தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, காவர்கள், அன்பு வேல், வரதராஜ், சுந்தர். மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    • பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்ததால் சந்தேகம்.
    • வாகன சோதனையில் சிக்கினார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை செய்தார்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கை ஓட்டி வந்தவர் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் நாயக்கனேரி ஊராட்சி சீக்குஜேனை பகுதியை சேர்ந்த ஜெயவேல் மகன் சக்திவேல் வயது (23) கட்டிட தொழிலாளி என தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் டவுன் முகமது புறா 2-வது தெரு பகுதியை சேர்ந்த முகம்மது பாஷா மகன் முகம்மது காதிக் வயது (38) என்கிற தோல் வியாபாரியின் பைக் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுத்திருந்தார்.

    திருடு போன பைக் சக்திவேல் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பைக்கை பறிமுதல் செய்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இரணியல்:

    இரணியல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமகணேசன்.

    நேற்று ராமகணேசன் மற்றும் போலீசார் மாலையில் காரங்காடு குருசடி பகுதியில் வாகன தனிக்கையில் ஈடு பட்டுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும் டெம்போவில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். மேலும் வாகனத்தில் இருந்த மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அந்த வாலிபர் எந்த தகவலையும் கூற மறுத்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அதில் வாலிபர் ஒருவர் போதையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றவே டெம்போவில் வந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது சட்டையை கிழித்து கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேனியல் சேசுபாதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு டெம்போவில் வந்த குமார், மகேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இது வரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    இன்று தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் விஜயராகவன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு பின்னர் தான் சூலூர் தொகுதி தேர்தல் களை கட்டும்.

    நாளை மறுநாள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் 1-ந் தேதிக்கு பின்னர் தான் பிரசாரம் சூடுபிடிக்கும். அ.தி.மு.க.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சூலூரில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. ஆனால் சூலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது.

    சூலூர் தொகுதியில் 9 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வாகன சோதனை நடைபெற்றது.

    சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

    மார்த்தாண்டம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 15 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அதிகளவு லோடு ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    மேலும் அதிகளவு பாரம் ஏற்றி செல்வதனால் ரோடுகளும் சேதமடைந்து வாகனங்களில் செல்வோர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் கேரளாவிற்கு கனிமங்களை கடத்திச் செல்வதாகவும், வாகனங்களுக்கு சான்றிதழ் முடிந்த பின்பும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து நேற்று மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் அதிகாரிகள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரள பதிவு எண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டதாக அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 2 ஆம்னி பஸ்களுக்கும் தலா ரூ.32 ஆயிரம் அபராதத் தொகையாக விதித்தனர்.

    இதேபோன்று அந்த வழியாக 8 லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்ததாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டதாக 3 லாரிகளும், தடம்மாறி இயக்கப்பட்ட ஒரு மினி பஸ், அரசு பஸ்சுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றி டிக்கெட் வசூலில் ஈடுபட்ட 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    நேற்று நடந்த வாகன சோதனையில் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆவணங்கள் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்காணிப்பில் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    கோவை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.95 லட்சம், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சூலூர்:

    சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை பகுதியில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான இந்த படையினர் சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி முன்பாக நின்று சோதனை செய்து கொண்டுருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது.

    மேலும் அந்த காரில் ஒரு தனியார் வங்கியின் அடையாள அட்டையுடன் பாலராமஜோதி சுந்தரேஷ்வரி(55) என்ற பெண் அதிகாரியும் வங்கி உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரிக்கையில் காரில் இருந்த இரும்பு பெட்டியில் வங்கிப் பணம் 95 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து அந்த பணத்தினை கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்ட போது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் இருந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து தாசில்தார் அளித்த தகவலின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ண்ணிடம் ஒப்படைத்தனர்.

    சூலூர் அருகே சிந்தாமணி புதூர் எல் என் டி பைபாஸ் ரோடு பகுதியில் திருப்பூர் 5-ம் பகுதி மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே சமயம் கோவை பகுதியில் உள்ள வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் பல்லடத்திலிருந்து குனியமுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் வாகனத்தில் உள்ள பெட்டியை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    பெட்டிக்குள் இரட்டை குழல் துப்பாக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான துப்பாக்கி என்பது தெரியவந்தது பறிமுதல் செய்த துப்பாக்கி சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

    அந்த வாகனத்தில் ரூ.26 லட்சம் இருந்தது. ஆனால் அதில் ரூ.6லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த திருப்பூர் காலேஜ் ரோடு ஜவான் நகரை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவரிடம் விசாரித்தனர்.

    அவர், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக தான் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனம் திருப்பூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருவதாகவும், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

    இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் பிரபுவிடம் அறிவுறுத்தியுள்ளனர். #LokSabhaElections2019

    குளச்சல் அருகே பறக்கும் படையினர் சோதனையின் போது 36 பவுன் நகை மற்றும் ரூ. லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகத்தை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும்படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 288 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குளச்சல் லெட்சுமிபுரம் சந்திப்பில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையில் வாகன சோதனை நடந்தது. சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த வியாபாரியிடம் ரூ.66 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் விளவங்கோடு தொகுதியில் காரில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பத்மநாபபுரம் உட்பட்ட பகுதியில் கார் ஒன்றை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.92 லட்சத்து 90 ஆயிரத்து 285 ரொக்கப்பணமும், 20 மதுபாட்டில்களும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 300 கிராம் தங்கமும் 14 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். #tamilnews

    உடுமலை அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் நால் ரோட்டில் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டு பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் துணை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த வேனை நிறுத்தினர். வேனில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 700 இருந்தது.

    வேனை ஓட்டி வந்த உதயா என்பவரிடம் விசாரித்தபோது திருச்சி அருகே உள்ள பேட்டைவாய்த்தலையில் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த பணம் என கூறினார்.

    கைப்பற்றப்பட்ட பணம் உடுமலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை தாசில்தார் தங்கவேல் விசாரணை செய்து வருகிறார். #tamilnews
    உத்தனபள்ளி அருகே இன்று நடந்த வாகன சோதனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராயக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள உத்தனப்பள்ளி பஸ் நிலையம் அருகே இன்று காலை தோட்டக்கலை உதவி இயக்குனர் சிதம்பரம் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கெலமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவர் பெட்ரோல் மற்றும் போர்வெல் வாகனமும் சொந்தமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரியிடம் உரிய ஆவணங்களை காட்டி பின்னர் இந்த பணத்தை கொண்டு செல்லலாம் என்று தொழில திபரிடம் தெரிவித்தனர். #tamilnews
    புதுவை அருகே வாகன சோதனையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சேதராப்பட்டு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டன.

    வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள், பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில- மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அது போல் வானூர் சிறப்பு தேர்தல் படை பிரிவு அதிகாரி இளவரசன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று இரவு புதுவை அருகே மொரட்டாண்டி சுங்கச்சாவடி மையத்தில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உதவியோடு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அந்த காரில் 18 அட்டை பெட்டிகளில் வெள்ளி ஆபரண பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (வயது 26) மற்றும் சென்னையை சேர்ந்த முகமது ஷேக் அலி (25) என்பதும், சென்னையில் வெள்ளி நகைக்கடை நடத்தி வரும் இவர்கள் வெள்ளி பொருட்களை புதுவையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் கொடுத்து விட்டு மீதி வெள்ளி பொருட்களை சென்னைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. ஆனால், நகைகளை கொண்டு செல்லும் வாகனத்துக்கு ஆவணம் இல்லை.

    இதையடுத்து வெள்ளி பொருட்கள் மற்றும் காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 19 கிலோ எடை கொண்ட இந்த வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும். #LSPolls

    குமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 346 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
    ×