search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத 346 பேர் மீது வழக்கு
    X

    குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத 346 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 346 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

    தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
    Next Story
    ×