என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத 346 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்19 Dec 2018 11:04 AM GMT (Updated: 19 Dec 2018 11:04 AM GMT)
குமரி மாவட்டத்தில் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 346 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிசன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், குடித்து விட்டு வாகன ஓட்டியதாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீதும், முறையான ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 52 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குளச்சல் சந்திப்பு பகுதியில் நடந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள், வாகனம் ஓட்டி வந்ததாக 57 பேர் மீதும், குடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததாக 20 பேர் மீதும் முறையான ஆவணங்கள் இன்றி வாகன ஓட்டி வந்ததாக 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹெல்மெட் அணியாமலும் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டி வந்ததாக 100 பேர் மீதும் ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் 346 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சோதனை நடைபெற்றது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X