search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே வாகன சோதனையில் ரூ.95 லட்சம் - துப்பாக்கி பறிமுதல்
    X

    கோவை அருகே வாகன சோதனையில் ரூ.95 லட்சம் - துப்பாக்கி பறிமுதல்

    கோவை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.95 லட்சம், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சூலூர்:

    சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை பகுதியில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான இந்த படையினர் சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி முன்பாக நின்று சோதனை செய்து கொண்டுருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது.

    மேலும் அந்த காரில் ஒரு தனியார் வங்கியின் அடையாள அட்டையுடன் பாலராமஜோதி சுந்தரேஷ்வரி(55) என்ற பெண் அதிகாரியும் வங்கி உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரிக்கையில் காரில் இருந்த இரும்பு பெட்டியில் வங்கிப் பணம் 95 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து அந்த பணத்தினை கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்ட போது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் இருந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து தாசில்தார் அளித்த தகவலின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ண்ணிடம் ஒப்படைத்தனர்.

    சூலூர் அருகே சிந்தாமணி புதூர் எல் என் டி பைபாஸ் ரோடு பகுதியில் திருப்பூர் 5-ம் பகுதி மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே சமயம் கோவை பகுதியில் உள்ள வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் பல்லடத்திலிருந்து குனியமுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் வாகனத்தில் உள்ள பெட்டியை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    பெட்டிக்குள் இரட்டை குழல் துப்பாக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான துப்பாக்கி என்பது தெரியவந்தது பறிமுதல் செய்த துப்பாக்கி சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

    அந்த வாகனத்தில் ரூ.26 லட்சம் இருந்தது. ஆனால் அதில் ரூ.6லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த திருப்பூர் காலேஜ் ரோடு ஜவான் நகரை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவரிடம் விசாரித்தனர்.

    அவர், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக தான் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனம் திருப்பூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருவதாகவும், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

    இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் பிரபுவிடம் அறிவுறுத்தியுள்ளனர். #LokSabhaElections2019

    Next Story
    ×