search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money confiscation"

    • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
    • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தனபள்ளி அருகே இன்று நடந்த வாகன சோதனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராயக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள உத்தனப்பள்ளி பஸ் நிலையம் அருகே இன்று காலை தோட்டக்கலை உதவி இயக்குனர் சிதம்பரம் தலைமையில் பறக்கும்படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கெலமங்கலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவர் பெட்ரோல் மற்றும் போர்வெல் வாகனமும் சொந்தமாக வைத்திருப்பது தெரிய வந்தது.

    தொழிலதிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரியிடம் உரிய ஆவணங்களை காட்டி பின்னர் இந்த பணத்தை கொண்டு செல்லலாம் என்று தொழில திபரிடம் தெரிவித்தனர். #tamilnews
    ×