search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Train"

    • ரெயில்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 124 நகரங்களை இணைக்கும்.
    • 12 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெரும்பாலான மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக இருப்பது மின்சார ரெயில் சேவை. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பதி வரையும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பாதையில் சொகுசு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி வந்தே மெட்ரோ ரெயிலை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க இந்திய ரெயில்வே வாரியம் முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி விரைவில் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே பாரத் ரெயிலில் செல்லும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கும்.

    இதுகுறித்து இந்திய ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 'வந்தே பாரத் ரெயில்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மாநகருக்குள் போக்குவரத்து முறையை மாற்றியமைக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. அதன்படி, முக்கிய பாதைகளில் இயக்கப்படும் மின்சார பயணிகள் ரெயில்களுக்கு பதிலாக, நாட்டில் முதல் முறையாக வந்தே மெட்ரோ ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நகரவாசிகளின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வந்தே மெட்ரோ பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.

    குறிப்பாக, இந்த ரெயிலுக்கான பெட்டிகள் ஒரு தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதில் 4 பெட்டிகள் ஒரு யூனிட்டைக் கொண்டிருக்கும். குறைந்தபட்சம் 12 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே மெட்ரோ ரெயில் உருவாக்கப்படுகிறது.

    மாநகரின் தேவையை பொறுத்து 16 பெட்டிகள் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில், 12 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இந்த மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகள் மற்றும் அதிக வசதியுடன் தற்போது இயங்கும் மெட்ரோ ரெயில்களில் இல்லாத பல அம்சங்கள் இந்த ரெயிலில் இடம் பெறும்.

    வந்தே மெட்ரோ ரெயிலின் வேகத்தை குறைப்பதற்கான சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், குறைந்த நேரத்தில் அதிக நிறுத்தங்களில் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டே இதனுடைய சேவையை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 124 நகரங்களை இணைக்கும். 100 முதல் 250 கி.மீ. தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. குறிப்பாக, லக்னோ-கான்பூர், ஆக்ரா-மதுரா மற்றும் திருப்பதி-சென்னை உள்ளிட்டவை அடங்கும். ரெயில்கள் பெரிய நகர்ப்புற மையங்கள் மற்றும் செயற்கைகோள் நகரங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச்செல்வதில் கவனம் செலுத்தும். இந்திய ரெயில்வேயின் தற்போதைய தடங்களில் இயங்கும். பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    வருகிற ஜூலை மாதம் அதனுடைய சோதனை ஓட்டத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதற்கு பிறகு இந்த தரமான சேவைகள் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைக்க உள்ளது. இந்த ரெயிலில் உள்ள கூடுதல் அம்சங்களின் விவரங்கள், படங்களுடன் கூடிய தகவல்கள் விரைவில் பொதுமக்களுக்காக அதிகாரப்பூர்வமாக இந்திய ரெயில்வே வெளியிடும்' என்றனர்.

    இதுகுறித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும்போது, 'வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய ரெயில்வே வாரியம் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் குறுகிய தூரத்தில் இயக்குவதற்கான வந்தே மெட்ரோ ரெயில் பெட்டிகள் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்போது சேவைக்கு வரும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடங்கிய முறையான அறிவிப்பை இந்திய ரெயில்வே வாரியம் அறிவிக்கும்' என்றனர்.

    • கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காகவும் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    சென்னை:

    பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்த வகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் என தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் பயணிகளின் வசதிக்காவும் இந்த வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மனைவியை வழியனுப்ப சென்ற கணவர் அந்த ரெயிலில் தானியங்கி கதவுகள் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டதால் ரெயிலுக்குள் சிக்கி மனைவியுடன் பயணம் செய்த சம்பவத்தை அவரது மகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த கோஷா என்ற அந்த இளம்பெண் தனது தாயுடன் மும்பை செல்வதற்காக வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அவர்களை வழியனுப்புவதற்காக கோஷாவின் தந்தை 2 பெரிய பைகளுடன் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். பயணத்திட்டப்படி ரெயில் வந்ததும் 2 பைகளையும் பெட்டிக்குள் வைப்பதற்காக கோஷாவின் தந்தை சென்ற நேரத்தில் தானியங்கி கதவு மூடியது.

    இதனால் அந்த நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுகிய போது, ஏற்கனவே நேரமாகி விட்டதாக கூறியதோடு, ரெயிலும் வேகம் பிடித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்.

    இதனால் கோஷாவின் தந்தையும் மனைவியுடன் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகளின் பதிவுகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பெண்கள் குழுவினர் பாட்டு பாடும் வீடியோ தெற்கு ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    'மகிழ்ச்சியின் சிம்பொனி' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், 12 பெண்கள் சேர்ந்து ஒரு பாடலை பாடுகின்றனர். அதில் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளை பார்த்து பாடுவது போன்று காட்சிகள் இருந்தது.

    இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், பொது இடத்தில் தொல்லை கொடுக்கும் இது போன்ற பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஊக்குவிக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் ஆவேசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை-மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் உள்பட நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு அதிகமான ரெயில்வே திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    இதன்படி, தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரெயில், லக்னோ-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, டெல்லி (நிஜாமுதீன்)-கஜுரஹோ, செகந்திராபாத்-விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி-பாட்னா, லக்னோ-பாட்னா, அகமதாபாத்-மும்பை, பூரி-விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் சென்னை-மைசூரு இடையேயான 2-வது வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கவர்னர் ஆா்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

    வாரந்தோறும் புதன்கிழமை தவிர தினசரி காலை 6 மணிக்கு மைசூருவிலிருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில்(எண்:20663), பிற்பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். மீண்டும் மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:20664), சென்ட்ரல், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ண ராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20-க்கு மைசூரு சென்றடையும்.

    திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் ரெயில் சேவையை மங்களூரு வரை நீட்டிக்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

    இதுதவிர, கொல்லம்-திருப்பதி விரைவு ரெயில் சேவையைத் தொடங்கி வைக்கும் அவா், பேசின்பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட் லைனை நாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், சிங்கப்பெருமாள் கோவில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூா் ஆகிய 6 ஊா்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் நாட்டுக்கு அா்ப்பணித்தார். திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவுவிலை மருந்தகங்களையும், 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' (விற்பனை) அரங்குகளையும் திறந்து வைத்தார்.

    இதுதவிர, பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.


    • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    * மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
    • மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன்.

    கன்னியாகுமரி:

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாகர்கோவில் நகருக்கு முதன் முறையாக வருகை தந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து வரவேற்றேன்.

    சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

    மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினேன். தொடர் முயற்சிகளின் பலனாக இன்று வந்தே பாரத் ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது.

    கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வந்தே பாரத் ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கோவை:

    இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி தொடங்கியது. கோவை-சென்னை இடையே இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. தமிழகத்துக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுதான். அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது கோவை பொதுமக்கள் மற்றும் இங்கு தொழில் செய்து வரக்கூடியவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அடிக்கடி தொழில்முனைவோர்கள் வேலை விஷயமாக சென்னை சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. இவர்களின் முதல் விருப்பமாக ரெயில்கள் தான் உள்ளன. ஆனால் சாதாரண ரெயில்கள் சென்று சேருவதற்கு வெகுநேரம் ஆகி வந்தது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலால் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடுகிறது. இதனால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் உற்சாக வரவேற்பு உள்ளது. தற்போதும் இந்த வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் முழுவதும் நிரம்பி சென்ற வண்ணம் இருக்கிறது.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தென்னக ரெயில்வே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

    1-ந் தேதி முதல் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 8 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயில் 6 அரைமணி நேரத்தில் பெங்களூருவை சென்றடைந்து வருகிறது. இந்த ரெயில் மொத்தம் 540 இருக்கைகளை கொண்டது.

    இந்த ரெயிலில் பயணிக்க சாதாரண சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் ஒரு நபருக்கு ரூ.1860-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது கோவை மக்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இருந்த போதிலும் ரெயில் செல்லும் நேரத்தால் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு பயணிகளிடம் குறைவாகவே உள்ளது. ரெயில் இயக்கம் தொடங்கிய 1 மற்றும் 2-ந் தேதிகளில் மட்டுமே ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டினர். ரெயில் பெட்டிகளும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஆனால் அதன்பிறகு 3-ந் தேதியில் இருந்து இந்த ரெயிலில் பயணிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. மொத்தம் உள்ள இருக்கைகளில் 350 இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. இதற்கு ரெயில் புறப்படக்கூடிய நேரம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

    கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவது போன்று கோவை-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

    இங்கிருந்து அவசர தேவை மற்றும் வேலை விஷயமாக செல்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ரெயில் புறப்படும் நேரம் தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

    அதிகாலை 5 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. அப்படி என்றால் நாம் நள்ளிரவிலேயே புறப்பட்டு ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு வருவது மிகவும் சிரமம்.

    5 மணிக்கு பதிலாக 6 அல்லது 7 மணிக்கு ரெயில் இயக்கினால் நன்றாக இருக்கும். பயணிகளிடமும் இந்த ரெயிலுக்கு கோவை-சென்னை ரெயிலை போன்று வரவேற்பு கிடைக்கும்.

    கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் தினமும் கோவையில் இருந்து 6.10 மணிக்கு புறப்படுகிறது. இதனால் அந்த ரெயிலில் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். எனவே அதுபோன்று கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையின் நேரத்தை மாற்ற வேண்டும்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் என்றால் சாதாரண ரெயில்களில் இருந்து வேகமாக செல்லக்கூடியது. கோவை-சென்னை இடையே சாதாரண ரெயிலில் பயணிக்க 8 மணி நேரமாக இருக்கிறது. அதுவே வந்தே பாரத் ரெயிலில் 5 மணி 38 நிமிடங்களில் சென்று விடலாம். இதன் மூலம் 2 அரைமணி நேரம் மிச்சமாகிறது.

    அதுபோன்று பெங்களூரு செல்வதற்கு சாதாரண ரெயில்களில் 7 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரெயில் 5 மணி நேரத்தில் சென்றால் 2 மணி நேரம் மிச்சமாகும். ஆனால் இந்த வந்தே பாரத் ரெயில் 6 அரைமணி நேரத்தில் தான் செல்கிறது. இதுவும் பயணிகளிடம், மற்ற ரெயில்கள் 7 மணி நேரத்தில் சென்று விடுகிறது.

    இது வெறும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தான் செல்கிறது. அதற்கு இந்த ரெயிலில் பயணிப்பதை விட, மற்ற ரெயில்களிலேயே பயணித்து விடலாம் என தோன்றுகிறது.

    இதனாலும் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. எனவே நேரத்தை மாற்றி அமைப்பதுடன், ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில் மற்றும் விமான பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல் கூறியதாவது:-

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். கோவையில் இருந்து ஏற்கனவே பெங்களூருவுக்கு டபுள் டக்கர் (உதய் எக்ஸ்பிரஸ்) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுதவிர மும்பை லோக்மான்ய திலக் ரெயிலும் சென்று வருகிறது.

    இந்த ரெயில்களிலும் பயணிகள் பயணித்து வருகின்றன. தற்போது வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

    தொடர்ந்து குறிப்பிட்ட சில மணி இடைவெளிகளில் பெங்களூருவுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுவதால் தான் அந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. மேலும் இந்த ரெயிலுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் ரெயில் பயணிகள் அதிகளவில் உதய் எக்ஸ்பிரசை பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு இல்லாமல் போவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இரவு நேரத்தில் பெங்களூருவுக்கு போதுமான ரெயில்கள் இல்லை. எஸ்.ஆர்.டி.சி சார்பில் 11 வண்டிகள் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசனுக்கு செல்கிறது. இதில் 500 பயணிகள் தினமும் பயணிக்கின்றனர்.

    எனவே டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் இரவில் பெங்களூரு பயணம் மேற்கொள்வோர் இந்த ரெயிலை பயன்படுத்துவார்கள்.

    மேலும் வந்தே பாரத் ரெயில் அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது. அதிகாலையிலேயே ரெயில் நிலையத்திற்கு வருவது என்பது இயலாத காரியம். அதற்கு பதிலாக காலை 7 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    அவ்வாறு இயக்கும் பட்சத்தில் இந்த ரெயிலிலும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள். எனவே ரெயில்வே நிர்வாகம், டபுள் டக்கர் எக்ஸ்பிரசை இரவு நேரத்துக்கு மாற்றுவதுடன், வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து புறப்படும் நேரத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை-சென்னை, நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர்.

    எனவே கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் போன்று கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கோவை-பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 5 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ரெயிலில் பிளாட்பாரத்திற்கு வந்ததும், பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்வது வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்த பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும், பயணிகளுக்கு ரெயில் நிர்வாகம் சார்பில் காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கோவையில் இருந்து 5 மணிக்கு புறப்பட்ட ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    மறுமார்க்கமாக அங்கிருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8 மணிக்கு கோவையை வந்தடைய உள்ளது. கோவை-பெங்களூரு இடையேயான 380 கி.மீ தொலைவை 6 அரை மணி நேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. இன்று முதல் தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் கோவை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. காலை 5 மணிக்கே கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சொகுசு பெட்டிகள், சிறப்பு சொகுசு பெட்டிகள் என 2 வகையான பெட்டிகள் உள்ளன.

    சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,860-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காபி, திண்பண்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரெயில் 6 அரை மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் செல்லும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
    • சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி:

    பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரெயில், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக செல்ல இருப்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு குறைந்த நேரத்தில் சுமூகமான மற்றும் விரைவான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளும் வகையில், வருகிற 30-ந் தேதி முதல், 'வந்தே பாரத்' ரெயில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவையிலிருந்து அதிகாலை, 5.00 மணிக்கு புறப்படும், 'வந்தே பாரத்' ரெயில் திருப்பூர் நிலையத்துக்கு காலை 5.42 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 6.27 மணிக்கும், சேலத்திற்கு, 7.20 மணிக்கும், தருமபுரிக்கு 8.32 மணிக்கும், ஓசூருக்கு 10.05 மணிக்கும் சென்றடையும். கடைசியில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தை காலை 11.30 மணிக்கு அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஓசூருக்கு மதியம் 2.52 மணிக்கும், தருமபுரிக்கு மாலை 4.16 மணிக்கும், சேலத்திற்கு 5.53 மணிக்கும், ஈரோட்டிற்கு 6.45 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.25 மணிக்கும், கோவைக்கு, 8.00 மணிக்கும் சென்றடையும்.

    இந்த ரெயிலில், 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

    கோவை-பெங்களூரு, 'வந்தே பாரத்' ரெயிலுக்கான கட்டண விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்ட தருமபுரி ரெயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த ரெயில் இன்று கோவையில் இருந்து சேலம் வழியாக 8.15 மணிக்கு வந்தது. பின்னர் 8.19 மணிக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரெயில் தருமபுரி ரெயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் உற்சாகம் அடைத்தனர்.

    • வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும்.
    • ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. இதுவரை இந்தியா முழுவதும் 35 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் கோவை-சென்னை இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை இடையேயும் ரெயில் இயக்கப்படுகிறது.

    கோவை-சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதை போன்று, கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று தற்போது கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்தபடி காணொலி வாயிலாக கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    கோவையில் இருந்து புறப்படும் ரெயில் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூரு 380 கி.மீ தூரத்தில் உள்ளது. சாதாரண ரெயில்களில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் வரை ஆகும்.

    இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும். அதன்படி 5 மணி 40 நிமிடத்தில் ரெயில் பெங்களூருவுக்கு சென்றுவிடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வந்தே பாரத் ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், தலா 72 இருக்கைகள் கொண்ட 5 ஏ.சி. சேர் கார் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    இதுதவிர என்ஜினுடன் இணைந்த வகையில் மேலும் 2 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 40 இருக்கைகள் உள்ளது.

    இந்த ரெயிலில் உணவு, ஸ்நாக்ஸ் (நொறுக்குத்தீனி) உடன் கூடிய ஏ.சி. சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1000-ம் ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,850 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சேவை 30-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், இதன் தொடர் சேவையானது ஜனவரி 1-ந் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்படும்.

    காலை 6.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரை சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இதற்காக நேற்று கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இதில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.

    கோவையில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 7.40 மணிக்கு ஓமலூர் ரெயில் நிலையத்திலும், 8.30 மணிக்கு தருமபுரியிலும், 10.03 மணிக்கு ஓசூர் ரெயில் நிலையத்திற்கும் சென்று, அதன்பின்னர் 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அறிந்து கோவை மக்களும், தொழில் முனைவோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ×