search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வந்தே பாரத் ரெயிலில் பாட்டு பாடிய பெண்கள்
    X

    வந்தே பாரத் ரெயிலில் பாட்டு பாடிய பெண்கள்

    • வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பெண்கள் குழுவினர் பாட்டு பாடும் வீடியோ தெற்கு ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    'மகிழ்ச்சியின் சிம்பொனி' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், 12 பெண்கள் சேர்ந்து ஒரு பாடலை பாடுகின்றனர். அதில் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மொபைலில் பாடல் வரிகளை பார்த்து பாடுவது போன்று காட்சிகள் இருந்தது.

    இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், பொது இடத்தில் தொல்லை கொடுக்கும் இது போன்ற பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஊக்குவிக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் ஆவேசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×