search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tajikistan"

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 கைதிகள் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #TajikistanPrisonRiot
    துஷான்பே:

    தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.



    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு பலியாகினர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சிறையில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #TajikistanPrisonRiot
    தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    துஷ்பாண்டே:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். 

    இந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே இன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #Tajikistan #RamNathKovind
    துஷான்பே:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் - ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


    இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

    அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. #RamNathKovind #Tajikistan #EmomaliRahmon #TajikistanIndiaMOU
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார். #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் நேற்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

    ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே மற்றும் மாநிலங்களவை எம்.பி. சாம்சேர் சிங் மன்ஹாஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்று இருக்கிறார்கள்.



    தஜிகிஸ்தான் போய்ச்சேர்ந்த ஜனாதிபதிக்கு தலைநகர் துஷன்பேயில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான், பிரதமர் கோஹிர் ரசூல்சோடா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுகுர்ஜோன் சுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைநகர் துஷன்பேயில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நினைவிடங்களில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மாரியாதை செலுத்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் தேசிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு மாணவர்கள் மத்தியில் ‘பிரிவினைவாதத்தை ஒழிப்போம்; நவீன சமுதாயத்தின் சவால்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் தஜிகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Tajikistan #RamNathKovind
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 9-ம் தேதி வரை தஜகிஸ்தான் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானுக்கு அரசுமுறை பயணத்தை நாளை துவங்க உள்ளார். நாளை முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் அந்நாட்டு தஜகிஸ்தான் ஜனாதிபதி எமாமோலி ரஹ்மோன், பாராளுமன்ற சபாநாயகர் ஷுகுர்ஜோன் ஜுஹுரோவ், மற்றும் அந்நாட்டு பிரதமர் கோஹிர் ரசுல்ஜோடா ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தஜகிஸ்தான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் நவீன சமூகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடமும் சந்தித்துபேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன், லோக் சபா உறுப்பினரான சுபாஸ் பம்ரே மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான ஷம்ஷெர் சிங் ஆகியோர் உடன் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan  #RamNathKovind
    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #pmnarendramodi
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். 

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின்போது அந்நாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும், இந்தியாவை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர். #tamilnews #pmnarendramodi
    ×