என் மலர்

    செய்திகள்

    தஜிகிஸ்தான் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பலி
    X

    தஜிகிஸ்தான் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 கைதிகள் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #TajikistanPrisonRiot
    துஷான்பே:

    தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.



    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு பலியாகினர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சிறையில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #TajikistanPrisonRiot
    Next Story
    ×