search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer festival"

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.

    கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.

    அதனைதொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றி பார்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலைசிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பைக்காரா படகு இல்லத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் பைக்கார படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து விட்டு, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்கார படகு இல்லத்திற்கு செல்ல முடிவு எடுத்து அங்கு செல்கின்றனர்.

    ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உதகை வனத் துறை அதிகாரிகள் கூறு கையில், தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள சோதனைச் சாவடியால் வாகன நெரிசல் ஏற்படு வதாகவும், இதனை மாற்றி தர வேண்டும் என போலீசார் கேட்டுக்கொ ண்டனர்.

    அதன் காரணமாக தற்போது பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல் பைக்காரா சாலை விரிவாக்க பணியும் விரைவில் முடிந்ததும், அங்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஊட்டி முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.

    நாளை தொடங்கும் மலர் கண்காட்சியானது வருகிற 20-ந் தேதி வரை நடக்க உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோ னியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், வில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றை பூங்காவலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்து கொண்டிருக்கிறது.

    தயார் செய்யப்பட்ட 388 ரகங்களை சேர்ந்த 65 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.


    இந்த முறை பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள், ரங்கோலி அமைக்கப்பட்டு ள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டுன் பொம்மைகளும் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

    தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக கண்காட்சி தொடங்கும் நாளை மற்றும் நிறைவடையும் நாளான 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் லேசர் லைட் ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மலர் கண்காட்சிக்காக மேடை அமைத்தல், அரங்குகள் அமை த்தல், பணிகள் நடந்து வருகிறது.

    கார்னேசன் மலர்களை கொண்டு அலங்காரங்கள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் மூலம் ரெயில் உள்ளிட்டவைகளின் வடிவங்களும் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பூங்காவில் செய்யப்பட்டு ள்ளது.

    இதேபோல் ஊட்டி விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்குகிறது.

    4200க்கும் மேற்பட்ட ரகங்களில் உள்ள 32 ஆயிரம் பல வண்ண ரோஜா செடிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

    இ-பாஸ் நடைமுறை யால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ள நிலையில், மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்குவதால் வரக்கூடிய நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக் கப்பட்டிருந்தது.

    விளையாட்டு போட்டிகளும் மலை வாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.

    நேற்றுடன் விழா நிறைவடைந்து பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.

    அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கலெக்டர் தனலட்சுமி வரவேற்றார்.

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறை களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் ஜவ்வாது மலை வளர்ச்சி பெற்றது. இது வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

    முதன் முதலாக 26 ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலையில் கோடை விழா ஆரம்பித்தது தி.மு.க.ஆட்சியில்தான். மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மினி பஸ் வசதி குடிநீர் வசதி போன்றவை தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான்" என்று கூறினார்.

    கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

    கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 நாட்கள் நடக்கும் இந்த கோடை விழாவில் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    விழாவில் மாநில தட கள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.

    • மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் 23-வது கோடை விழா இன்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கோடை விழா நடந்த வளாகத்தில் வண்ண, வண்ண மலர்கள் ெகாண்ட தோரணங்கள், மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் கொண்டு அனைவரையும் கண்கவரும் வகையில் வடிவமை க்கப்பட்டு இருந்தது.

    ேமலும் முக்கிய சந்திப்பு இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    கோடை விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்து. காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.

    மேலும் போலீசார் மோப்ப நாய்களின் நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சாகச விழிப்புணர்வு நிகழச்சிகளும் நடந்தது.

    வேளாண்மை துறை மற்றும் தோட்டக்க லைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மலர் மற்றும் காய்கறி கண்காட்சி அணைவரையும் கவர்ந்து இழுத்தது. ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனை சந்தையும் அமைக்கப்பட்டு இருந்தது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடக்கும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் தொடக்கமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, சமூகநலத்துறை, மகளிர் திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை சார்பில் பெண்களுக்கான கோலப் போட்டி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு என தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

    கலை பண்பாட்டுத்துறை. சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித் துறை மூலமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள். பாடல்கள், விளையா ட்டுகள், உணவு வகைகள் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

    கண்காட்சி அரங்கங்களில் அரசு திட்டங்கள் குறித்த விளக்க மாதிரிகள் மற்றும் குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும், துறை சார்ந்த அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க கையேடுகள் மற்றும்துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இன்று நடந்த கோடை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டதால் அந்த பகுதியில் விழாக்கோலம் பூண்டது.

    இன்று காலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளத்தாளங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ் 6000 பயனாளிகளுக்கு ரூ. 500 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோடை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் 86 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், செய்து முடிக்கப்பட்ட 583 பணிகளின் திறப்பு விழா மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள 380 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா என மொத்தம் ரூ.580.68 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் வருகையால் திருவண்ணாமலையில் தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்
    • தி.மு.க.வினர் ஏற்பாடு

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நாளை 23-வது கோடை விழா மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து கீழ்பென்னாத்தூரில் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ. எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் குப்புசாமி, தேவேந்திரன், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. நிர்வாகிகள் பரசுராமன், செல்வமணி இளைஞரணி சதீஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியிலும் தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் அன்பு தலைமையில் நடந்தது.

    • ஜவ்வாது மலை கோடை விழாவுக்கு வருகிறார்
    • எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு ஜவ்வாதுமலையில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் கலசபாக்கம் சரவணன், செங்கம் கிரி ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் வருகிற 18-ந் தேதி ஆலங்காயத்திலிருந்து ஜமுனாமரத்தூருக்கு வருகை தர இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எல்லை பகுதியில் பல்லாயிர க்கணக்கானோர் திரண்டு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. பின்னர் நடக்கும் சுற்றுலா மாளிகை திறப்பு விழா, கலைஞர் நினைவு நூற்றாண்டு

    பயணியர் நிழற்கூடம் திறப்பு ஆகியவற்றில் கலந்துகொண்டு உற்று சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது.

    பின்னர் கோடை விழா விற்காக பிரமாண்டமாக அமைக்க ப்பட்டு வரும் பந்தல் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது.
    • இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெய்தல் கோடை விழாவை தொடங்கி வைத்து மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசுகையில், கடலுார் சில்வர் பீச்சில் அடுத்தாண்டு நடக்கும் விழாவில், பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். தோட்டக்கலைத் துறை மூலமாக நெய்தல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தருமாறு கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது.

    நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நடக்கும் ஹேப்பி ஸ்டீரிட் விழாவைப் போன்று, கடலுாரில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கோடை விழா நடத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்திற்கு கடந்தாண்டு 19 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த மாதம் வரை 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இந்தாண்டு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு 22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்தாண்டு 30 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது ஜெகதீஸ்வரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய் ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகர தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி, ஆராமுது, ஹேமலதா சுந்தரமூர்த்தி, சாய்ந்துனிஷா சலீம், பார்வதி, சசிகலா ஜெயசீலன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா, சுதா ரங்கநாதன், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், கார் வெங்கடேசன், லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் கொடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுக்களிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா , சங்கீதா, கவுன்சிலர்கள் ஆராமுது , சுபாஷ்ணி ராஜா, பார்வதி, சுதா, செந்தில்குமாரி, சசிகலா ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் லெனின், கார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
    • நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும். இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னகப் பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் கோடை விழா-2023 முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்,

    கைவினை கலைஞர்களின் பொருட்காட்சி விற்பனை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நாளை (புதன்கிழமை ) மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவை எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

    மேலும் இந்த கலை விழா தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாமல் பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் திருச்சியிலும் நடைபெறும்.

    இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தக் கலை விழாவுக்கு முன்னோட்டமாக தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை 6.30 மணிக்கு வாராந்திர கலை விழா தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படு த்தவும், கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளது.

    நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    அனைவரும் கோடை விழாவுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஐயர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வந்தாலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (24-ந்தேதி) கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி கோடை விழா நடைபெறுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    அதிக அளவு சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பேரிகார்டு வைத்து கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

    மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    நாளை கோடை விழா மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பிரையண்ட் பூங்காவில் டைனோசர் உருவம், திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவியல் படைப்புகள் மலர்களால் உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாளை காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் விழா தொடங்க உள்ளது. விழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, மதிவேந்தன், வேலுச்சாமி எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை தொடங்கும் கோடை விழா 10 நாட்கள் ஜூன் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6 நாட்கள் தோட்டகலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவும் நடைபெற உள்ளது.
    ×