search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singamuthu"

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது.
    • எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்ட போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் ஆட்சி கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?

    பதில்:-அவர் ஆசை அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டை முதலில் சீர் திருத்தட்டும். தமிழக மக்கள் கண்ணீரும், கவலையுமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழ் மக்கள் வாடி வதங்கி இருக்கிறார்கள். முதலில் தமிழகத்தை சரி பண்ணட்டும். பிறகு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.

    கேள்வி:-தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?

    பதில்:- கமல்ஹாசன் மக்களின் மனங்களை அறியாதவர். மக்களோடு மக்களாக இருக்காதவர். திடீரென ஒரு கட்சி தொடங்கி புரட்சி தலைவர் போலவும், புரட்சி தலைவி போலவும் நாட்டை பிடித்து விடலாம் என்று அவர் கற்பனையில் இருக்கிறார். அது நடக்காது. கமல்ஹாசன் எப்போதும் ஒரு ஓட்டுக் குதிரையில் பயணம் செய்வார் அவ்வளவுதான்.

    கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு வழங்கப் படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. இது எதையுமே அவர்களால் செய்ய முடியாது.

    கேள்வி:- இந்த தேர்தலில் நடிகர் வடிவேலு மவுனம் காத்து வருகிறாரே?

    பதில்:-வடிவேலு மவுனம் காத்து வருவதை என்னை விட பொருத்தமாக யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் பயணம் செய்தவர்கள். அரசியல் எனக்கு ராசியில்லை என்று அவரே சொல்லிவிட்டாரே? பிறகு ஏன் அவரை அழைக்கிறார்கள்?

    கேள்வி:-பிரதமர் மோடி தான் என்னை ராமநாதபுரத்தில் போட்டியிட சொன்னார் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்து வருகிறாரே?

    பதில்:-அவர் சொல்வது அவருக்கு மட்டும் தானே தெரியும். நாம் எல்லாம் கேட்டோமா? பொய் கூட சொல்லலாம் அல்லவா?

    கேள்வி:-பிரசார களத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-அமோகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். நான் மற்றும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், அருள்மணி உள்ளிட்ட பலர் பல இடங்களுக்கு பிரசாரத்துக்காக சென்று இருக்கிறோம். முன்பு இருந்ததை விட இரட்டை இலைக்கு புது மவுசு வந்துள்ளது. காரணம் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட அவஸ்தைகள் போதாதா? அ.தி.மு.க. ஆட்சி மலராதா? என்று மக்கள் ஏங்கி தவிப்பதை நாங்கள் காண்கிறோம்.

    கேள்வி:-இந்தியா கூட்டணி பற்றி உங்கள் பார்வையில்?

    பதில்:-இந்தியா கூட்டணி இல்லை அவர்கள் இந்திய கூட்டு களவாணிகள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடிவேலு மற்றும் சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது.
    • இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு படங்களில் இணைந்து நடிப்பதை குறைத்துக் கொண்டனர்.

    தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு, சிங்க முத்து இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் காம்பினேஷன் காட்சிகள் என்றால் படம் விற்பனை செய்வதற்கும் உதவியாக இருந்தது. இந்த நிலையில் தான் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 வருடங்கள் ஆன பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவைக் காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது.

     

    வடிவேலு - சிங்க முத்து

    வடிவேலு - சிங்க முத்து

    இது குறித்து சிங்க முத்துவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, "நாங்கள் இரண்டு பேரும் நேரில் உட்கார்ந்து பேசினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்து விடும். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு என் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை சுமத்தினார். இதையெல்லாம் நிரூபிக்க முடிந்ததா? இல்லையே. எல்லாமே பொய். இப்போதும் நான் அவரோடு உட்கார்ந்து பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    ×